Tuesday, October 30, 2007

அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது

அனைவருக்குமான அடிப்படை கல்வியை மறுப்பது தேசிய கொள்கையாகின்றது.

உலகவங்கியின் உத்தரவுக்கு இணங்க இலங்கையில் பாடசாலைகள் மூடப்படுகின்றன. லாப நட்ட கணக்கை அடிப்படையாக கொண்டு, மூடப்படும் ஒவ்வொரு பாடசாலைக்கும் வக்கிரமான விளக்கங்கள் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு குழந்தையாக கல்வி மறுப்பதும், கல்வியை தனியார் மயமாக்குவதன் மூலம் கல்வியை விலை பேசி விற்கும் அடிப்படை தளத்தில் அரசு வேகமாக முன்னேறுகின்றது. தேசியம், தேசிய பண்பாடு என்ற உரக்க கூக்குரல் இட்டு யுத்தம் செய்யும் இலங்கையில், தமிழ் சிங்கள வேறுபாடு இன்றி தாய் மொழிக் கல்வியை மறுப்பது அன்றாட நிகழ்வாகி வருகின்றது. மாறாக உலகமயமாதல் மொழியில் ஒன்றான ஆங்கிலத்தில் கற்பிப்பதும் அதிகரிக்கின்றது. தற்போது இலங்கையில் 168 பாடசாலைகளில் ஆங்கிலமொழி மூலம் ஜீ.சி.ஈ. உயர்தர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. உலகவங்கி 1500 ஆங்கில ஆசிரியருக்கான விசேட நிதியை வழங்கியுள்ளது. கல்வி முற்றாக மறுப்பது, அல்லது தாய்மொழிக் கல்வியை மறுத்த அன்னிய மொழிக் கல்வியை வழங்குவது, கல்வியை விலை பேசி விற்பது, இலங்கையின் கல்வி கொள்கையாகிவிட்டது.

1996 இல் இலங்கையில் மொத்த மாணவர்கள் எண்ணிக்கை 42 லட்சமாகும். இதை விட அண்ணளவாக 7 லட்சம் மாணவர்கள் பாடசாலையை எட்டிப் பார்ப்பதில்லை. அதாவது இது அண்ணளவாக மூன்று லட்சமாக இருந்து. இது 2003 இல் 4.5 லட்சமாக மாறியுள்ளது. கல்வி மறுப்பு இலங்கைத் தேசியமாகி வருகின்றது. பிறக்கும் ஒவ்வொரு 100 குழந்தையில்; 14 பேர் கல்வி என்பது மறுக்கப்பட்ட சமூக வாழ்வியல் அமைப்பில் பிறக்கின்றனர். மறு தளத்தில் பாடசாலைகள் பல மூடப்படுகின்றது.

இலங்கையில் பாடசாலைகள் எப்படி மூடப்படுகின்றது. என ஆராய்வோம்.

வருடம் பாடசாலைகளின் எண்ணிக்கை மாணவர்கள் எண்ணிக்கை
1946 5946 5 93 000
1976 9683 25 72 000
1992 10590 42 89 000
1997 10983 42 60 000
2000 9992 41 90 000
2001 9987 41 84 957


1994-2001 இடையில் மூடப்பட்ட பாடசாலைகள் மகாண ரீதியாக
மாகாணம் எண்ணிக்கை
மேற்கு 80
மத்திய 44
தெற்கு 72
வடகிழக்கு 149
வடமேற்கு 101
வடமத்திய 18
ஊவா 08
சப்பிரகமுவ 54
மொத்தம 526


இதில் 2002 இல் மட்டும் 500 பாடசாலைகள் மூடப்ட்டுள்ளது. 1990க்கு பின் மெதுவாக பாடசாலைகளை மூடத்; தொடங்கி அரசு, அதை மிக வேகமாக மூடுவதை துரிதப்படுத்தியதை புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. பாடசாலைகளை மூடுவது என்ற கொள்கை 1990 களில் இருந்து வேகம் பெற்றது என்பதையும், இது வேகம் பெற்ற உலகமயமாதல் நிகழ்ச்சி நிரலுடன் நேரடியாக தொடர்புடையதையும் புள்ளிவிபரங்கள் எடுத்துக் காட்டுகின்றது. கல்வி கற்கும் மாணவர் எண்ணிக்கை குறைந்து செல்வதை எடுத்துக் காட்டுகின்றது. அடிப்படைக் கல்வி என்ற விடையத்தை ஆராயின், முதலாம் ஆண்டு வகுப்புககான மாணவர் அமைதி குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகின்றது.
வருடம் எண்ணிக்கை
1980 3 64 500
1985 3 72 000
1990 3 87 000
1995 3 42 000
1999 3 43 000
2001 3 30 000
2002 3 30 000


1997-2002 இடையில் 1096 பாடசாலைகள் மூடப்பட்டன. 1990 இல் 3.87 லட்சமாக இருந்த முதலாம் ஆண்டு மாணவர் அனுமதி, 2002 இல் 3.3 லட்சமாக வீழ்ச்சி அடைந்துள்ளது. குறைந்து வரும் முதலாம் ஆண்டுக்கான குழந்தைகளின் இணைவு ஒருபுறம் சமுதாயத்தின் கல்வி மறுப்பை உறுதி செய்ய, கல்வி வெறும் சடங்காக மாறுகின்றது. குழந்தைகள் பாடசாலைக்கு அனுப்பவதன் மூலம் கிடைக்கும் அற்ப மதிய உணவைப் பெறவும், அன்றாட பிழைப்புக்கு சென்று திரும்பும் வசதி கருதி பாடசாலை அனுமதி தொடருகின்றது. ஆனால் கல்வி தரம் மேலும் ஆழமாக வீழ்ச்சி அடைவதை அரசு தனது கொள்கையாக னெபண்டு திட்டமிட்டே கையாளுகின்றது. அரசு கம்பனிகளை நட்டமடைய வைத்து தனியாருக்கு தரைவார்ப்பது போல், கல்வியின் வீழ்ச்சி அடையவைத்து கல்வியை தனியார் மயமாக்கும் முயற்சிக்கு முன்கையெடுப்பது தேசிய கொள்கையாகி உள்ளது.

இதன் விளைவு தீடிரென நிர்வணமாகத் தொடங்கியுள்ளது. புதிதாக பல பாடசாலைகளை மூடுவதற்கான அடிப்படை விளக்கங்களை கொடுக்கும் புள்ளிவிபரங்களை தயாரித்து வெளியிடுகின்றனர். இதனடிப்படையில் 5 பாடசாலைகள ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவனும், 18 பாடசாலைகள் 2 மாணவருக்கு ஒரு ஆசிரியரும் என பல பாடசாலைகள் இயங்குவதாக புள்ளிவிபரங்களை தயாரிக்கின்றனர். ஆனால் ஒரு ஆசிரியருக்கு ஒரு மாணவன் என்ற நிலையில் உள்ள சுற்று வட்டரத்தில் உள்ள அனைத்து குழந்தைகளும் பாடசாலை செல்லுகின்றதா என்ற அடிப்படை விடையத்தை மட்டும் திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். அப்படி அனைத்துக் குழந்தையும் சென்றால், அவர்கள் எங்கே ஏன் செல்லுகின்றனர் என்ற காரணத்தையும், ஏன் இந்த பாடசாலைக்கு செல்வதில்லை என்ற காரணத்தையும் கூட திட்டமிட்டு மூடிமறைக்கின்றனர். கொள்கை ரீதியாக காரணங்களை மூடிமறைத்தபடி பாடசாலைகளை மூடவும், பாடசாலைகளின் அவலங்களுக்கு காரணமான அரசின் மறுகாலனியாதிக்க கொள்கைகளை பூச்சடிப்பது மூலம் உலகமயமாதல் நிபந்தனை நிறைவு செய்யப்படுவது துரிதமாகின்றது.

மறு தளத்தில் கல்வி மறுப்பை துரிதமாக்கவும், மாணவர்களின் கல்வியை வலுகட்டயமாக நலமடிக்கும் கொள்கையை திட்டமிட்டு அரசு செய்கின்றது. கல்வியில் நம்பிக்கை இழக்க வைக்கவும், பாடாசலைகளை கைவிட்டுச் செல்லும் கொள்கை இங்கு திட்டமிட்டே புகுத்தப்படுகின்றது. இதனடிப்படையில் 41 முதல் 100 மாணவர்களைக் கொண்ட 194 பாடசாலைகள் ஒரு ஆசிரியரைக் மட்டும் கொண்டு இயங்குகின்றது. 14 பாடசாலையில் 75 முதல் 100 மாணவர் கொண்ட அதே நேரம், ஒரு ஆசிரியரே உள்ளனர். மாணவர்களின் கல்விக்கு போதுமான ஆசிரியர்கள் இன்றி கல்வி முடமாக்கப்படும் கொள்கை இங்கு அழுல் செய்யப்படுகின்றது. 2001 இல் 1 முதல் 15 மாணவாகளைக் கொண்ட பாடசாலைகள் 162 இருந்தன. 16 முதல் 30 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 457 இருந்தன. 31 முதல் 51 மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள் 668 இருந்தன. 51 முதல் 75 மாணவர்களைக் கொண்ட 744 பாடசாலைகள்; இருந்தன. 100 மாணவர்க்கு குறைந்த 2657 பாடசாலைகளின் காணப்படுகின்றது. இந்த பாடசாலைகளின் அழிவு துரித கதியில் நடக்கின்றது. 100 மாணவாகளுக்கு குறைந்த பாடசாலைகளை மூடும் கொள்கை அழுலுக்கு வரவுள்ளது. இந்த வகையில் 2657 பாடசாலைகளின் கதி கேள்விக்குள்ளாகியுள்ளது. இதன் மூலம் 1 முதல் 2 லட்சம் மாணவர்களின் கல்வி நிரந்தரமாகவே மூடமாக்கி விடுவது உலகமயமாதலின் உடனடிக் கொள்கையாகி உள்ளது.. மிகப் பெரிய பாடசாலைகள் நோக்கி கல்வி குவிவதுடன், அங்கு பல்வேறு நிதி அறவீடுகள் மூலம் எழைகள் வடிகட்டி அகற்றப்படுகின்றனர். பண அறவீடுகள் படிப்படியாக அதிகரிப்பதுடன், தனியார் மயமாக்கும் கல்வியின் முதல்படியாக இவை உள்ளது.

திட்டமிட்ட அரசின் உலகமயமாதல் கொள்கைக்கு இணங்க, கல்வியின் தரத்தை குறைப்பது முதல் படியாக உள்ளது. இதன் மூலம் கல்வி மீதான நம்பிக்கையை சிதைத்து தனியார் மயமாக்களை துரிதமாக்குவது தேசிய கொள்கையாக உள்ளது. இதன் முதல்படியாக வசதியான பிரிவு தாமாகவே தனியார் கல்வியை நோக்கி செல்வது அதிகரிக்கின்றது. இதைப் பின்பற்றி மற்றைய பாடசாலைகள இட்டுச் செல்வது இலகுவானதாகிவிடுகின்றது. கல்வியின் தரத்தை குறைக்கும் முயற்சியாக, பாடசாலை ஆசிரியர்களின் தகமையைக் குறைப்பது முதல்படியாக உள்ளது. இது இலகுவானதும் கூட. இதனடிப்படையில் நாட்டிலுள்ள 9 ஆயிரத்து 876 பாடசாலைகளில் அண்ணளவாக மூவாயிரம் பாடசாலைகளில், அதாவது மூன்றில் ஒரு பாடசாலைகளில் உரிய தகைமைகள் அற்ற அதிபர்களால் நிர்வாகிக்கிபடுகின்றது. பொதுவாக பிழைப்புவாத அரசியல் கட்சிகளுடன் இருந்த பொறுகிகளும், சமூதாய நலனற்ற பிரிவினருமே இப்பதவிகளில் தொற்றிக் கொள்கின்றனர். சமுதாயத்தின் அனைத்து சமூகச் சீரழிவுகளின் பிரதிநிதிகளாக இவர்கள் உள்ளனர். இவர்கள் கற்பித்தல், கற்றுக் கொள்ளல், சமுதாய நலன்களை முன்னிறுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமிருப்பதில்லை. அரசியல் கட்சிகளின் கைக்கூலிகளாகவும், பினாமிகளாகவும் நக்கிப் பிழைக்கும் இவர்கள், மாணவர்களின் ஒட்டு மொத்த வாழ்வையே அழிப்பதில் முதல்தரமான சமூக விரோதிகளாக உள்ளனர். அண்மையில் பல பாடசாலைகளில் ஆசிரியர்கள் அதிபர்கள் பெண் குழந்தைகளை பாலியல் ரீதியாக வதைப்பதும், மாணவர்கள் மீதான ரவுடித்தனமான வன்முறைகளை ஏவுவது மட்டுமின்றி, அரசியல் செல்வாக்கு மூலம் அதில் இருந்து தப்பிவிடுவதும் அம்பலமாகி வருகின்றது. இது ஒட்டு மொத்த கல்வி சமூகத்தில் இது போன்ற சமூக விரோதச் செயல்கள் வெறுமனே ஒரு அங்கம் மட்டுமேயாகும்.

பாடசாலைகளின் அதிபர் நியமானத்தில் இனவாத அரசியல் புகும் போது, தரம் மேலும் ஆழமான வீழ்ச்சியை துரிதமாக்கின்றது. அமைதி சமாதானம் என்று இன ஒற்றுமை பற்றி பேசிக் கொண்டே வழங்கிய இனவாத நியமனத்தில், அதிபர் சேவை வகுப்பு 1 க்கு வழங்கப்பட்ட 200 நியமனங்களில் 198 சிங்களவருக்கும் ஆசிரியர்களும் ஒரு தமிழ் மற்றும் ஒரு முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். இப்படி அதிபர் சேவை வகுப்பு 2 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 470 சிங்கள ஆசிரியர்களும் 19 தமிழ் மற்றும் 11 முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவுசெய்யப்பட்டனர். அதிபர் சேவை வகுப்பு 3 க்கு வழங்கப்பட்ட 500 நியமனங்களில் 487 சிங்கள ஆசிரியர்களும் 13 தமிழ் மற்றும் முஸ்லிம் ஆசிரியர்களும் தெரிவு செய்யப்பட்டனர். ஒருபுறம் சிங்கள இனவாத அமைப்பில் எற்படும் நியமனம் அரசியல் செல்வாக்குக்குள் நக்கிபிழைக்கும் தகுதியற்றவர்களை கொண்டு நிரப்ப, மறுபுறத்தில் இனவாதம் திட்டமிட்டு தமிழ் முஸ்லீம் நியமனங்களை மறுத்த பாடசாலைகளையே ஒட்டு மொத்தமாக இலங்கையில் தகுதியற்றதாக்கின்றனர். கடந்த 2000ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவில் பதில் உதவிக் கல்விப் பணிப்பாளர்களாகக் கடமையாற்றிய வடக்கு - கிழக்குக்கு அப்பால் உள்ள அனைத்து சிங்கள ஆசிரியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது. ஆயினும், வடக்கு - கிழக்கில் சேவையாற்றிய சுமார் 375 தமிழ் மற்றும் முஸ்லிம் உதவிக் கல்விப் பணிப்பாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை. திட்டமிட்ட இனவாதம் தமிழ் முஸ்லிம் கல்வியை ஒழித்துக் கட்டுகின்றது என்ற மற்றொரு உண்மையும் இங்கு பொதிந்து கிடக்கின்றது.

ஒருபுறம் தகமையற்ற பொறுக்கிகள் சமுதாயத்தை வழிநடத்தி நாட்டை படுகுழியில் தள்ளுகின்றனர். மறு தளத்தில் உயர் தகமையுள்ள உயர் கல்வி பெற்ற 26000 பட்டதாரிகள் வேலை இன்றி அலைகின்றனர். எதிரிடையான இந்தப் போக்கு விரிவாகி, சமுதாயத்தின் அனைத்துப் பகுதியையும்; சீராழிக்கின்றது. ஆசியாவில் உயர்ந்த கல்வி தரமுள்ள நாடு இலங்கை என்பது எல்லாம் கடந்தகால கனவுகளாகிப் போனது. கல்வியின் அடிப்படை தரத்தை நிர்ணயம் செய்வது கணிதப்பாடமாகும்;. இன்று இலங்கை முழுக்க கணித அறிவியல்; பெறுபேறுகள் மிகவும் வீழ்ச்சியடைந்து செல்லுகின்றது. இதில் ஜீரணிக்க முடியாத உண்மை என்னவென்றால், யாழ்ப்பாணத்தின் கணித அறிவியல் வீழ்ச்சிதான். முதல் தரமான அறிவியல் கொண்ட பிரதேசமாக இருந்த யாழ்மாவட்டத்தை 30 மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஆராய்ந்தபோது, 21ஆவது இடத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. ஒருபுறம் இனவாத யுத்தம் புலிகளின் கொள்கையும் இதை உருவாகினாலும், ஒட்டு மொத்தமாகவே அரசு உலகமயமாதல் நிபந்தனைக்கு இணங்க திட்டமிட்ட கல்வி மீதான புறக்கணிப்பு இதைச் சாதித்துள்ளது. அத்துடன் கொழும்புக்கு அடுத்த மிகபெரிய நகர் வாழ்வியல் பண்பாடுகளை உள்வாங்கும் யாழ்குடா, உலகமயமாதல் வக்கிரத்தில் புதையுண்டு விட்டதால் கல்வியின் தர வீழ்ச்சி துரிமாகியுள்ளது.

26000 பட்டதாரிகள் வேலை இன்றி உள்ள அதே நேரம், 2003 இல் உயாதரப் பரிட்சையில் 251000 மாணவாகள் தோற்றிய போதும் 16000 பேருக்கே பல்கலைக்கழக அனுமதி. என்ற முடிவற்ற துயரமும் மாணவர்கள் முன் திணிக்கப்படுகின்றது. 2.35 லட்சம் மாணவர்கள் உயர்தரப் பரிட்சை எழுதிய பின் வேலை தேடி அலையும் துயரம் திணிக்கப்படுகின்றது. எந்த நம்பிக்கையான பாதையுமற்ற நிலையில் சமூகத்தில் தள்ளப்படுகின்றனர். கட்சிகளின் பொறுக்கி அரசியலுக்கு லும்பனாகவும், அவர்களுக்கு கையூட்டும் கொடுத்த வாழ்வைப் பெறும் அற்ப ஒரு வழிப் பாதை தான் இங்கு ஒரு சமூக நடைத்தையாகிவிட்டது. மற்றொரு பகுதி பொறுக்கிகளாகவும், உலக நகர்புற லும்பன் வாழ்வை அடிப்படையாக கொண்டு வாழவும் கூட இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. இதைவிட்டால் நாட்டை விட்டு ஒடவும், நாயைப் போல் அடிமையாக அடிமைப்பட்டு வாலாட்டு அற்ப தொழில்களை தேடி அலையவே இளைய சமுதாயத்துக்கு இந்த அமைப்பு வழிகாட்டுகின்றது. நேர்மையாக இளைமைத் துடிப்புடன் இந்த நாட்டில் வாழ, இந்த சமூக அமைப்பில் எந்த இடமும் இளைஞர்களுக்கு இல்லாதாக்கப்பட்டுள்ளது. சமுதாயத்தின் சமூச் சிராழிவு அப்பட்டமாகவே காட்சி அளிக்கின்றது. மொத்த தேசிய உற்பத்தியில் ஆறில் ஒன்று ஊழலுக்குள் சிக்கித் தான் வெளிவருகின்றது என்ற உண்மையை இலங்கை அரசின் புள்ளவிபரங்களே தெளிவுபடுத்தகின்றது. ஜனாதிபதி சந்திரிக்கவும், அவரது மகன் விமுக்திக்கும் கொழும்பு கறுவாக் காட்டில் அரசு காணியை (நிலத்தை) பேர்ச் 45 சதத்துக்கு அமைச்சு மூலம் வாங்கியுள்ளனர். இதே போன்று 25 ரூபாவுக்கு பல மந்திரிமார் காணிகளை வாங்கி குவித்துள்ளனர். இன்றைய (2003) காணி அமைச்சு தன் மீதான காணி மோசடிக்கு பதிளிக்கும் போது, இவற்றை ஆதாரபூர்வமாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் மூலம் தனது காணி மோசடியை சமப்படுத்திக் கொண்டார். உண்மையான ஊழல் இதை விட அதிகமானது என்பதும், சமூகச் சிதைவு விதிவிலக்கற்றதாக இருப்பதையும் மறுக்க முடியாது.

-நன்றி:தமிழரங்கம்-

Sunday, October 28, 2007

துள்ளித்திரியும் பிள்ளைப்பருவம்

- தெ. மதுசூதனன்

தேசியச் சட்டங்கள் பிராயமடையும் வயதை முன் தள்ளி வைத்தாலன்றி மற்றபடி 18 வயதுக்கு உட்பட்ட ஓர் ஆள் சிறுவர் ஆவார்.

எந்தவொரு சமூகத்திலும் சிறுவர்கள் - பிள்ளைச் செல்வம் பெறுமதி மிக்க சொத்தாகும். இவர்களே நாளைய குடிமக்கள். ஒரு சமூகத்தின் செயல்பாட்டாளர்கள்.

பிள்ளைகளுக்கும் உரிமைகள் உண்டு. இதனை நமது பெரியவர்கள் அறிவதில்லை. சிறுவர் உழைப்பு, சிறுவர் விபச்சாரம், வழி தவறிச் செல்லும் சிறார்கள் என்பன மூன்றாம் மண்டல நாடுகளின் தனித்துவமான பிரச்சினைகள் எனலாம். இதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் சிறுவர்கள் பிரச்சினைகளே இல்லையென்பது இதன் பொருளல்ல.

இன்று இந்தச் சிறுவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மனித உரிமைப் பிரச்சினைகளாக விரிவாகச் சிந்தித்து செயலாற்றும் நிலையில் நாம் உள்ளோம். இதற்காக அனைத்து நாடுகள் மட்டத்தில் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்திய போக்கு உள்ளது.

இதன் முக்கியமான நான்கு அம்சங்கள்:

1. வாழ்க்கை

இயற்கையாக அமைந்துள்ள உரிமை உயிர் வாழ்தலுக்குள்ள உரிமையாகும். சாத்தியமான உச்சமட்டத்தில் குழந்தைகள் உயிர் வாழ்வதையும் வளர்ச்சியடைவதையும் ஒவ்வொரு அரசும் உறுதிப்படுத்த வேண்டும்.

2. முன்னேற்றம்

ஒவ்வொரு குழந்தையும் தனது முழு ஆற்றலையும் வளர்த்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பினை அளிப்பதும், கல்வி பெறுதல், ஓய்வாக சாவகாசமாக இருத்தல், கலாசார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் என்பவற்றுக்கான உரிமை

3. பாதுகாப்பு

உள ரீதியாக அல்லது உடல் ரீதியாக ஊனமுற்ற சிறுவர், அகதிகள், அனாதைச் சிறுவர், பெற்றோரிடமிருந்து பிரிக்கப்பட்டிருக்கும் சிறுவர், சிறுவர் தொழிலாளர், பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்ட சிறுவர் போன்றோருக்கு அவசியமாகும். சிறுவர்கள் போதைப்பொருள்களைப் பயன்படுத்துவதையும் விற்பனை செய்வதையும் தடுப்பதும் இதன் நோக்கம்.

4. பங்குபெறல்

கருத்து வெளிப்பாடு, தகவல், சிந்தனை, மனசாட்சி, சமயம் என்பவற்றுக்கான சிறுவர்களுக்குள்ள உரிமை. மேலும் சமூகத்தில் சுறுசுறுப்புடன் பங்கேற்கும் உரிமை.

யூனிசெப் மதிப்பீட்டின்படி உலகில் மூன்று கோடி சிறுவர்கள் சாலையோரங்களில் வசிக்கின்றனர். ஐந்து கோடி சிறுவர்கள் பாதுகாப்பற்ற சுகாதாரமற்ற நிலைமைகளில் வேலை செய்கிறார்கள்; வாழ்கிறார்கள். சுமார் 70 லட்சம் பேர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். சுமார் பத்து கோடி சிறுவர்களுக்கு ஆரம்பக் கல்வி கூடக் கிடைப்பதில்லை. 15 கோடி சிறுவர்கள் போதிய ஊட்டச் சத்தின்றி உள்ளனர். குறிப்பாக ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பங்களாதேஷ், இலங்கை போன்ற ஆசிய நாடுகளைச் சேர்ந்த சிறுவர்கள்தான் அதிகம்.

நமது சிறார்களின் நல்வாழ்வையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்த வேண்டியது பெரியவர்களின் பொறுப்பாகும். எனவே இப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தி தீர்வுகளைக் கண்டறிய வேண்டியது சமூகத்தின் தார்மீகக் கடமையாக இருக்கிறது.

சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் என்றால், இதற்கு அனைத்து நாடுகள் ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட்ட வரைவிலக்கணங்கள் ஏதும் இல்லை. ஆனால் 1989 நவம்பர் 20 - இல் வெளியிடப்பட்ட சிறுவர் உரிமை குறித்த ஐ.நா. சபைப் பிரகடனத்தின்படி பார்த்தால் இந்த உரிமைகளை மீறுவது சிறுவர் துஷ்பிரயோகம் எனக் கொள்ளலாம்.

அதாவது பிள்ளைப் பருவத்தின் தேவைகளை முழு அளவில் நிறைவு செய்வதற்கு எது தடையாக இருக்கிறதோ, அதுவே சிறுவர் துஷ்பிரயோகம் என அனுமானித்துக் கொள்ளலாம்.

குறிப்பாகச் சொல்வதானால் பிள்ளைப்பருவம் என்பது தங்கியிருக்கும் ஒரு காலப்பிரிவாகும். எனவே அது சிறப்பான அக்கறையையும் பராமரிப்பினையும் வேண்டி நிற்கும் நேரத்தில், கடுமையாக ஊறு விளைவிக்கத்தக்க ஒரு பருவமாகவும் இருக்கிறது. அத்துடன் பிள்ளைப்பருவம் என்பது உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் சமூக ரீதியாகவும் வளர்ச்சி யடையும் ஒரு காலகட்டமாகும்.

அதனால் இதற்கு சிறப்பு பாதுகாப்பு முறைகளும், உசிதமான சூழலும் அமைதல் அவசியமாகும். மேலும் இப் பருவத்திலேயே பிள்ளை தன்னைச் சூழ்ந்திருக்கும் உலகினைப் புரிந்து கொள்வதற்காகவும் எதிர்கால வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்திக் கொள்வதற்காகவும் தீவிரமான முறையில் கல்வி பயிலும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுகிறது.

எனவே கவனித்தல், கேள்வி கேட்டல், ஏற்றுக் கொள்ளப்பட்ட நடத்தை மாதிரிகளைப் பயிலுதல், அறிவையும் திறன்களையும் பெற்றுக் கொள்ளல் போன்றவற்றுக்கான வாய்ப்புகள் பிள்ளைப் பருவத்தில் பெற்றுக் கொள்ளப்படல் வேண்டும். இதனை பிள்ளைப் பருவத்துக்கான கருதுகோளாக ஏற்றுக்கொள்ளும்பொழுது பிள்ளையின் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் அல்லது தடங்கலாக இருக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் சிறுவர் துஷ்பிரயோக நடவடிக்கையாக இருக்கிறதெனக் கொள்ள முடியும். அத்துமீறல் நடவடிக்கை எனவும் கொள்ள முடியும்.

இந்தக் கண்ணோட்டத்தில் நோக்கும்பொழுது சிறுவர் துஷ்பிரயோகம் என்பது விரிவான பல அம்சங்களைக் கொண்டிருப்பதனைக் காண முடிகிறது.

அது சமூகவியல், மானுடவியல், உடற்கூற்றியல், சமூக உளவியல், கல்வி, குற்றவியல், சட்டம், பொருளியல், அரசியல் என பல்வேறு துறைகளிலும் பின்னிப் பிணைந்த சிக்கலான பல பரிமாணங்களைக் கொண்ட துறையாக இருக்கிறது. அதோடு கலாசாரம், மனப்பாங்குகள் என்பவற்றையும் அது உள்ளடக்குகிறது. இந்நிலையில் நாம் இன்று சிறுவர் துஷ்பிரயோகம், அதாவது அத்துமீறப்பட்ட சிறுவர் உரிமைப் பறிப்பு குறித்த நமது கவனத்தைக் குவிக்கவும் சில சிரத்தைகளை சிந்தனைகளை ஏற்படுத்துவது தார்மீகக் கடமை.

நன்றி:ஆறாம்திணை

Tuesday, October 16, 2007

சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள்

18 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் உலகெங்கும் கொடூரமான வன்முறைக்கு ஆளாகி வருகின்றனர்.

பாராளுமன்றங்களுக்கிடையிலான ஒன்றியமும் (Inter-Parliamentary Union) யுனிசெவ் (UNICEF) அமைப்பும்ம் இணைந்து 2007 இல் வெளியிட்டுள்ள "பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகளை இல்லாதொழித்தல்" (Eliminating Violence against Children) என்ற கைநூலில் பிள்ளைகள் வன்முறைக்குள்ளாகுவது தொடர்பான புள்ளிவிபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பிள்ளைகளுக்கெதிரான வன்முறைகள் மிகக் குறைந்த அளவிலேயே வெளித் தெரியவருகின்றது என்பது அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின்படி,

* 2002 இல் 53,000 பிள்ளைகள் வரை கொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* அவர்களு் 22,000 பிள்ளைகள் (கிட்டத்தட்ட 42%) 15 முதல் 17 வயதினர்; கிட்டத்தட்ட 75% ஆனோர் ஆண்கள்

* 80 முதல் 98 சதவீதக் பிள்ளைகள் அவர்களது வீட்டில் உடல்வீரிதியாகத் தண்டிக்கப்படுகின்றனர்.

* 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பாடசாலைகளில் பிள்ளைகள் பிரம்பு, இடுப்புப்பட்டி போன்றவற்றால் அடித்துத் தண்டிக்கப்படுகின்றனர்.

* குறைந்தது 30 நாடுகளில் பிள்ளைகளுக்குச் சவுக்கடி அல்லது பிரம்படி சட்டரீதியான தண்டனையாக உள்ளது.

* உலகப் பிள்ளைகளில் 2.4 சதவீதமானோர் மட்டுமே உடல்ரீதியான தண்டனைகளிலிருந்து சட்டரீதியான பாதுகாப்புப் பெற்றுள்ளனர்.

* ஆண்டுதோறும் 133 முதல் 275 மில்லியன் பிள்ளைகள் தம் பெற்றோருக்கிடையேயான வன்முறையை நேரில் காண்கின்றனர்.

* வார்ந்துவரும் நாடுகளில் 20 முதல் 65 சதவீதப் பிள்ளைகள் (ஆய்வுக்கு) முந்தைய 30 நாட்களில் உடல்ரீதியாகவோ சொல்ரீதியாகவோ தாக்கப்பட்டுள்ளனர்.

* மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் பாடசாலை மாணவரில் 35 சதவீதமானோர் ஆய்வின் முன்னரான இருமாதத்தினுள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம் 15 முதல் 64 சதவீதமாக மாறுபடுகிறது.

* 2002 இல் 18 வயதுக்கு உட்பட்ட 150 மில்லியன் பெண்பிள்ளைகளும் 73 மில்லியன் ஆண் பிள்ளைகளும் பலாத்காரப் பாலுறவு அல்லது வேறு பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* 21 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்புக்களில் குறைந்தது 7 சதவீதமான (36 சதவீதம் வரை) பெண்களும் 3 சதவீதம் ஆண்களும் (29 சதவீதம் வரை) தாம் பிள்ளைப் பருவத்தில் பாலியற் துன்புறுத்தலுக்கு ஆளானதைப் பதிவுசெய்துள்ளனர்.

* 15 வயதின் முன் முதற் பாலுறவில் ஈடுபட்ட பெண்களில் 11 முதல் 45 வீதத்தினர் பலாத்காரப்படுத்தப்பட்டதைப் பதிவுசெய்துள்ளனர்.

* இப்போதுள்ள பிள்ளைகளில் குறைந்தது 82 மில்லியன் பெண்கள் 10 முதல் 17 வயதிலும் மேலும் பலர் அதைவிடக் குறைந்த வயதிலும் திருமணம் செய்யப்படுவர்.

* உலகில் 100 மில்லியன் முதல் 140 மில்லியன் சிறுமிகளும் பெண்களும் ஏதோ ஒரு வகையில் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.

* சில நாடுகளின் சில பகுதிகளில் 71 முதல் 99 வீதமான சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்; சில சிறுமிகள் 4 வயதாகமுன்னரே பெண்ணுறுப்புச் சிதைக்கப்பட்டுள்ளனர்.

* சகாராப் பிரதேச்ச்த்திலும், எகிப்து, சூடான் ஆகிய நாடுகளிலிம் ஆண்டுதோறும் 3 மில்லியன் சிறுமிகள் பெண்ணுறுப்புச் சிதைக்கப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

* 2004 இல் 218 மில்லியன் பிள்ளைகள் பிள்ளைத் தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 126 மில்லியன் பிள்ளைகள் ஆபத்தான வேலைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

* 2000 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 5.7 மில்லியன் பிள்ளைகள் பலாத்கார அல்லது அடிமை முறையில் வேலைசெய்கின்றனர்; 1.8 மில்லியன் பிள்ளைகள் பாலியற் தொழிலில் அல்லது பாலியற் திரைப்படத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர்; 1.2 மில்லியன் பிள்ளைகள் கடத்தப்படுகின்றனர்.

நன்றி:unicef.org

Sunday, October 14, 2007

MY SKY HAS NO RAINBOWS

by Hariharan

I started to count holes on the wall – large and small. That one – that large one must be from a big shell piece. Other small ones may be from the bullet shots - or may be from small but dangerous shell pieces. My Thambi* died because of this small shell piece, so small and terrifying. Window pane was violently removed from its place so a clear view of outside is clearly visible from here. But only a little bit of light coming from it. I helplessly tried to avoid the vision of the blood stained walls – and miserably failed, every time I tried to do so. Because it’s our building--the only and last shelter available for Amma and me. We left home during the 2001 battle.

I recall a meadow, green garden and appaa’s whisper. My heart deserved green, yellow, red, - oh the garden with every type of colors in it- now there’s only a wilted tree stands there. That was hell – we visited our home during the temporary ceasefire. The garden where we played together turned into a barren land with plenty of landmines buried in it. We used to bury seeds there. As memories began to flow, my body felt a sudden chillness-- a quiver of chillness, too sweet to bear- just like the memories. And as I think of my lost past, desire swells within me. I’m stirred by those long-ago voices, green garden, rushing wind scented with the Jasmine fragrance. This is more than my heart could abide.

I can almost hear appaa’s voice, familiar and close-so real. For an instance I mistake the wind against my ear for his gentle loving goodnight kiss. Last night, I turned to seek his collar in the darkness, beyond my fear I felt courage at his closeness. I sobbed badly and ammaa comforted me with a thevaram*. In the morning I saw her Saree, which she kept carefully under the pile of other things, was wrapped all over my body in order to protect me from the cold wind.

Memories about my Appaa, Puppy, Thambi, and his butterflies; oh, those greeny days. Like in a dream, images are moving in my head. It’s very funny you know, Appaa used to say that the rain is the tear of fairies – he told that they are crying because of extreme delight; The delight that came from seeing children playing happily and praying to the gods regularly. Thambi always counter him with the question of thunder – why is thunder. Appaa often changed the subject soon after this question. Now it’s raining. Do fairies cry seeing me helpless, lonely and caged? Who knows? I felt an urge to cry…

Clouds are forming in the sky. It is really chilling. Light fades and dies out. Again I move to the window, inhaling the December air. It tasted of rain. I am flooded with sweet shifting memories. I lean against the sill of the broken window. The view of the outside is not clear; maybe because of my dizziness. I recalled the green mist, the distant and lost green…

Amma has gone to the co-operative shop. It is the only way to get food items since all the shops in the peninsula went out of stock. I felt a great fear at the sudden realization of the fact that I’m alone in this building. Amma forgot to take the umbrella with her. It stands there like an old man. It belonged to daddy. Amma carefully protected it and carried everywhere we ran. It’s raining. I’m feeling hungry. This morning the boiled manioc was not enough for my stomach. Amma ate three FICTION pieces of it with scrapped coconut. Manioc is the only food item we can afford. She gave the rest of it to me. With heavy feeling of hungry, I ate all of them. She looked at me with a pitying and sad look in her eyes. I felt guilt. That was a humiliating moment. I’m still guilty at that – Amma may feel terribly hungry.

Amma wanted me to come with her to the co-operative shop but I refused. She wanted me to help her carrying the things from the co-operative shop. I carefully avoided being seen with her. She doesn’t have any ornaments to wear. She wears a torn sari. And above all, she sobs to get things at the shop. She lost her ‘Displaced’ certificate. So the manager refused to give out the goods for free of charge. She went on sobbing, telling the crowd about the miserable life we lead now. Gradually Amma is turning into a beggar. I watched all of these with humiliation. I wanted to escape from there. It was like a suffocating hell. Co-operatives are the only hope. Last week the co-operative also went out-of stock – so we had to pass the week with mangoes as the morning breakfast. We drank sugarless plain tea with a dash of jaggery. At first I refused to take them, I demanded Thosai, Idly, and Uppumaa. Amma hit me with the thin poovarasu cane until I agreed to eat the mangoes. I wept a lot and she tried to calm me down with her soothing words. But I continued to insist that I’m not satisfied with the mangoes. She slapped herself on her head violently. Crying--Calling out all the god names…. I watched her with fear. I cried loudly to stop her from dying. She sat at the corner and sobbed all that night. I was fast asleep. That night I dreamed of those old days. In my dream, came my home with its glorious colorful garden, where we used to play while smelling the seductive smell of the Thosai Amma cooks in the kitchen. Making Thosai is a festival indeed. The celebrations would begin as early as one day before the Cooking-Thosai-Day; Grinding-Mixing-Blending. We all watch the process eagerly hearing the stories about Moon, Jungle and everything we love. Amma is really an expert on relating stories. Her voice is very dreamy and effectively fits when it comes to enactment of the well-loved stories. In the next day morning, we place ourselves in the kitchen, listening to the ‘zoiiiing’ sound of the Thosai batter being poured on the hot pan. The scent of ghee fills the air – Thambi busies himself in making facemasks in the cooked Thosais. I the elder am roaming there and here as if I’m engaged with some important task. To be precise, it must be three years since the Last time I saw Thosai.

I heard people describing us as nuisances and they even called Amma another cockroach in their area. This humiliation is constantly taking place. Yesterday the tenant came and shouted that the rent should be paid immediately. His filthy remarks angered even me. Amma pleaded him to be patience. She literally prayed him in a huskier tone, may be fearing others-or even me could hear her. He continued to insist constantly and eventually went away. I ran away to the backyard fearing that Amma is going do something-something that makes me fear. When I returned to the building to see her sat on the dark corner with an empty look in her eyes. I noticed her ears miss earrings-the last piece of gold she had.

Stains, bloodstains everywhere, I can’t escape seeing them. I wanted to sleep, but it’s thundering. I want Amma, Bed Sheet and a song to sleep. Nowadays, Amma is telling me that she forgot all the lyrics and stories. Her voice- a voice we all loved once-become noticeably hard. I recalled her sweet voice, which sung us bed-time rhymes and thevarams*. I recalled her tender patting to make us sleep and closed my eyes.

With the eyes closed I heard the wind blow. It sings. In which language does it sing? Who knows? I woke up to the voice of somebody crying nearby. It’s very common. Amma told me to not to open the door unless it’s her. It’s not raining now. There is a thin ray of light coming into the darkness through the hole in the roof. Sun is visible right now I thought, soon Amma will come. It’s really very long since she went outside. The smell of rainwater and sweat coming into my nose and I wanted to escape – oh these blood stained walls.

I opened the door to get some fresh air and light. Water dropping veempu tree, standing there green but lonely. The rain refreshed the green all around this house. It’s a pleasure to see such a sight. I wanted to walk in that grass to get a chilly walk. But there is beware-of-mines sign. I stood there expecting Amma. When it rains look for the rainbow-Ammamma use to say. I looked at the sky searching the rainbow. I saw clouds forming again. There was no rainbow. The street is also deserted. I’m beginning to fear, Amma, Amma – won’t you come back? BOOMB Must be claymore because the sound is very noisy. I shuddered at the fact that I’m alone in this building. I’m hearing to the intense firing. My legs are rooted and I’m able to sense my body trembling with fear. Footsteps, Footsteps everywhere. Almost everybody is carrying a gun. I closed my eyes. Amma….

Appaa – Father
Ammaa – Mother
Ammamma – Grandmother
Thambi – younger brother
Thevaram – Prayer
Thosai –also Dosa, Thosai, an expensive breakfast, taking up much of the time to prepare .
Uppumaa – Another special breakfast made out of semolina. Considered expensive compared with the typical Jaffna breakfast.
Poovarasu – A tree which gives the most terrifying cane.

[28. AUGUST.2006—2.30amJaffna]

Thanks to Nethra-April 2007 (Journal of ICES, Colombo)

Tuesday, October 9, 2007

சுதந்திரம் மறுக்கப்படும் குழந்தைகள்

-சேவியர்-

இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீது ஒரு சுமை வளையமாக விழுந்து விடுகிறது. பாதுகாப்பற்ற சமூகம் குழந்தைகளின் மீதான சுதந்திரத்தின் மீது ஒரு பெரிய எந்திரக் கல்லைச் சுமத்தியிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

கோடிட்ட இடங்களை நிரப்பும் வினாத்தாள் போல இருக்கும் சில அறைகளுக்குள் மட்டுமே பறந்து திரியும் வாழ்க்கையைத் தான் இன்றைய சமூகம் குழந்தைகளுக்குப் பரிசளித்திருக்கிறது என்பது வேதனையான உண்மை.

இதனால் குழந்தைகள் பெரும்பாலும் தொலைக்காட்சி கார்ட்டூன்களுக்கோ கலியுகக் குத்துப் பாட்டுகளுக்கோ ரசிகர்களாகவேண்டிய கட்டாயத்துக்குள் தள்ளப்பட்டு விடுகின்றனர். தற்போதைய குழந்தைகள் தொலைக்காட்சிகள் கூட குழந்தைகளால் நடத்தப்படும் பெரியவர்களுக்கான நிகழ்ச்சிகள் போல இருப்பதால் இவர்களுடைய மழலை சுவாரஸ்யங்கள் மறுதலிக்கப்படுகின்றன.

குழந்தைகள் கடத்தல் பயம் நகரக் குழந்தைகளை மதில் சுவருக்குள் வளைய வரவே அனுமதிக்கிறது. வெளியே அனுப்பினால் குழந்தைகள் வீடு வந்து சேர்வார்களா என்னும் வெலு நியாயமான பயத்துடனே உலவ வேண்டிய நிலை பெற்றோருக்கு.

இன்றைய நெரிசல் போக்குவரத்தும், வாகன ஓட்டிகளின் அலட்சியமும் தெருவில் விளையாடும் பிள்ளைகளின் நலனின் மீது மிகப்பெரிய விழும் இன்னொரு சுமையாகி விடுகிறது. கிராமங்களில் சுதந்திரமாய் மரங்களிடையே தும்பி பிடிக்கும் சுவாரஸ்யத்தை நகரம் கற்பனையில் கூட கண்டு களிக்க முடிவதில்லை.

இத்தகைய சூழல் ஆரோக்கியமானதுதானா ? குழந்தைகளின் மழலைக்காலம் வெறும் வகுப்பறைகளிலும், வரவேற்பறைகளிலும், படுக்கையறைகளிலும் மட்டுமே இட்டு நிரப்பும் வருடங்களாகிப் போனது குழந்தைகளை மன ரீதியாக எந்த அளவுக்குப் பாதிப்படையச் செய்கிறது என்பது போன்ற பல ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டே இருக்கின்றன.

வெளியில் ஓடி ஆடி விளையாடாத குழந்தைகளின் உடல் நலன் வெகுவாகப் பாதிப்படைகிறது எனவும், அவர்களுக்குத் தேவையான உடல் ஆரோக்கியம் இருப்பதில்லை எனவும் சமீபத்தில் வெளியான இங்கிலாந்து ஆய்வு ஒன்று தெளிவுபடுத்தியிருக்கிறது.

குழந்தைகளை சுதந்திரமாகவும், திறந்த வெளிகளிலும் விளையாட அனுமதிப்பது அவர்களுடைய உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் வளர்க்கிறது என்பது அந்த ஆராய்ச்சியின் முடிவாகும்.

குழந்தைகள் வரையறை படுத்தப்பட்ட, அல்லது ஒழுங்குபடுத்தப்பட்ட சட்டங்களுக்குள் விளையாடும் போது அவர்களுக்கு விளையாட்டே சுமையாகிப் போய்விடுகின்றது. கட்டுப்பாடற்ற காற்றைப் போன்ற சிறுவயதினர் தங்கக்கூண்டுக்குள் தத்தித் தவழ்தலை எப்போதும் விரும்புவதில்லை.

கணினி விளையாட்டுகளோ, தொலைக்காட்சியோ குழந்தைகளின் ஆரோக்கியத்தை எந்த விதத்திலும் வளர்ப்பதில்லை. மாறாக கெடுத்து குட்டிச்சுவராக்கி விடுகின்றன என்பது தான் நிஜம்.

சுமையான பாட திட்டங்களும், சுமையாய் விழும் சமூக அமைப்பும் கெடுத்துக் கொண்டிருப்பது மிகவும் தூய்மையான, உன்னதமான மழலைக்காலத்தை என்பதை நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

இந்தியாவில் மட்டுமன்றி இந்த பிரச்சனை ஒரு சர்வதேசச் சிக்கலாகவே மாறியிருக்கிறது. பிரிட்டனின் கடந்த பதினைந்து ஆண்டுகளாக குழந்தைகளின் ஆனந்தம் குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

குழந்தைகள் ஆரோக்கியமான இடங்களில் விளையாடட்டும் என நினைக்கும் பெற்றோரின் மனோபாவம் கூட இதன் ஒரு காரணி எனக் கொள்ளலாம். உண்மையில் குழந்தைகளின் ஆரோக்கியமும், நோய் எதிர்ப்புச் சக்தியை வளர்க்கும் வாய்ப்பும் இத்தகைய சுதந்திர விளையாட்டுகளில் தான் கிடைக்கின்றன என்பது வசதியாக மறக்கப்பட்டு விடுகிறது.

குழந்தைகள் சமீப காலமாக உடல் எடை அதிகமாய் இருக்கும் பிரச்சனையும் இதனுடன் தொடர்பு படுத்திப் பார்க்கக் கூடியதே. நொறுக்குத் தீனிகளுக்குள் குடியிருந்து கொண்டு தொலைக்காட்சிகளில் லயித்திருக்கும் குழந்தைகள் உடல் எடை அதிகரிப்பதில் வியப்பென்ன இருக்க முடியும் ?

இன்றைய நவீன வீடுகளும் ஒரு குழந்தைக்கு மேல் யோசிக்காத பெற்றோர்களால் தான் நிரம்பி வழிகிறது. இத்தகைய சூழல் குழந்தைகளை இன்னும் அதிகமாய் பாதிப்படைய வைக்கின்றன. தனிமைப்படுத்தப்பட்டு வாழ்வின் மீதான சுவாரஸ்ய அனுபவங்கள் இழந்து இயந்திரத் தனமான வாழ்க்கையையே வாழ வேண்டிய பலவந்தத்திற்கும் பால்யம் புகுந்து விடுகிறது.

வெளியே தனியே போக ஒரு குறிப்பிட்ட வயது வரவேண்டும் என்னும் கொள்கையை பெரும்பாலான பெற்றோர் கடைபிடிக்கின்றனர். இதனால் அந்த வயதுக்குக் கீழே உள்ள குழந்தைகள் கட்டுப்பாடுகளுடன் கூடிய சூழலில் மட்டுமே உலவ வேண்டிய சூழல் உருவாகி விடுகிறது.

இத்தகைய தனிமைப்படுத்தப்படும் குழந்தைகள் மன அழுத்தம், அல்லது அதீத கோபம், சமூக அக்கறையின்மை, போன்றவற்றால் தாக்கப்படும் அபாயம் உண்டு. குழந்தைகளுக்கான சுதந்திரம் பறிக்கப்படுகையில் அவர்களின் மனதில் ஏற்படும் ஏமாற்றம் அளவிட முடியாதது.

‘ஓடி விளையாடு பாப்பா’ என்பது கனவாகி விட்டது. சதுர அடிகளால் கட்டப்பட்ட வீடுகளில் ஓடித் திரியும் குழந்தைகளைப் பார்த்து ‘ஓடாதே மெதுவாய் நட’ என வேகத் தடை போடுகிறோம். சத்தம் போட்டால் ‘கத்தாதே அமைதியாய் இரு’ என்கிறோம். படிக்கட்டில் ஏறினால் ‘ஏறாதே..இறங்கி வா’ என அதட்டுகிறோம். மொத்தத்தில் குழந்தைகளுக்கு அவர்களுக்கே உரிய சுதந்திரங்கள் அனைத்தையுமே மறுத்து விடுகிறோம்.

குழந்தைகளை குழந்தைகளுடன் சுதந்திரமாக விளையாட விடுவது அவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெருமளவு உற்சாகமடையச் செய்கிறது என்பது பல ஆராய்ச்சிகளின் மூலம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கு மாறாகவே இன்று நமது வீடுகளும், விளையாட்டை மறுக்கும் கல்வி நிலையங்களும், பாதுகாப்புக்கு உத்தரவாதமற்ற சமூகமும் நடந்து கொள்கின்றன. குறிப்பாக இன்று பல கல்வி நிலையங்கள் குழந்தைகளை செதுக்குவதாய் நினைத்து வாக்கியங்களை மனப்பாடம் செய்யும் ரோபோக்களாக்கிக் கொண்டிருக்கின்றன.

சுதந்திரமாய் விளையாட அனுமதி மறுக்கப்படும் குழந்தைகள் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியற்றவர்களாகவும், பயத்தினால் சூழப்பட்டவர்களாகவுமே வளர்கின்றனர். இந்த பயத்தை உணவு உண்ண மறுக்கும் குழந்தைக்கு ‘மூணு கண்ணன் வாரான்’ என்று சொல்லும் தாய்மார்கள் ஊட்டி வளர்க்கின்றனர்.

இன்றைய வாழ்க்கைச் சூழல் குழந்தைகளின் மீதான பெற்றோரின் கரிசனையை அதிகப்படுத்தியிருப்பது இயல்பே. ஆயினும் இந்தக் கரிசனையே ஒரு சுமையாய் குழந்தைகளின் மீது சாய்க்கப்படுவதும், குழந்தைகளின் ஆனந்தத்துக்குக் குறுக்கே மிகப்பெரிய மதில் சுவராய் எழுந்து நிற்பதும் ஆரோக்கியமானதல்ல.

குழந்தைகளின் மீதான அக்கறை அவர்களின் சுதந்திரமான விளையாட்டை தடை செய்வதாக இருக்கக் கூடாது. அவர்களுக்கு அதற்குரிய பாதுகாப்பான சூழலையேனும் உருவாக்கித் தருவது பெற்றோரின் கடமையாகும்.

நம்முடைய பால்யத்தின் சுவாரஸ்யங்களின் ஒரு பகுதியையேனும் நமது மழலைச் செல்வங்களும் அனுபவிக்கும் படியான வாழ்க்கைச் சூழலை உருவாக்கும் முனைப்பை பெற்றோர் முதன்மைப் பணியாகக் கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கே உரிய குழந்தைகளின் சுதந்திரங்களை மீட்டுக் கொடுப்போம், அவர்களுடைய ஆனந்தத்தின் எல்லையை விரிவாக்குவோம்.

நன்றி: கவிதைச்சாலை

Monday, October 8, 2007

பிள்ளைகள்… பிள்ளைகள்…

January 6th, 2007

ஒவ்வொரு மாலையும் அருகாமையில் ஒரு நூலகத்தில் குழந்தைகளைக் கூட்டிச் சென்று வாசிக்கின்ற புத்தகங்களில் குண்டு போடாத வானங்கள் பற்றிய கற்பனைகளை நாங்கள் தருகிறோம். விண்மீன்கள் மின்னும் இரவுகளில் குண்டுகள் போடாத விமானங்கள் அவர்களது சுவர்களை அலங்கரித்திருக்கின்றன; பிள்ளைகளுக்கான எமது கதைகளில் கற்பனைகளும் பயணங்களும் இருத்தலின் அத்தனை மகிழ்ச்சிகளும் வந்து போகின்றன.

யுத்த புலத்தில் பிள்ளைப் பிராயத்திற்கான அத்தனை ஆசைகளும் உயிர்வாழ்தல் என்ற ஒன்றையே சுற்றுகின்றன. அதற்கு அப்புறம்தானே எல்லாமும்? யுத்தத்தைப் பற்றி பேசினோம்.

யுத்தத்தால் பாதிக்கப்படுவது அதை முகங் கொடுத்திருக்கிற மக்களின் வாழ்வு என்றால், அதில் தமது பெற்றோர் உறவுகளை இழக்கிற பிள்ளைகளின் வாழ்வு எந்த உத்தரவாதமுமற்ற வெளியில் விடப்படுகிறது. அதிலும் “பாதுகாப்பானவை” என நம்பப்படுகின்ற குடும்பம், உறவுகள் இவற்றுக்குள்ளேயே பாதுகாப்பற்றவர்களாய், இலகுவில் ஏய்க்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களான சிறுவர்களை யுத்தம் தெருவில் விடுகிறது, எச் சிறு பாதுகாப்பும் இன்றி.

இந்த வார செய்திகளில், தென் சூடானில் (மேன்மைதாங்கிய உலகின் காவலர்களான) ஐ.நா.”அமைதிப் படையினர்” 12 வயதிற்குட்பட்டவர்கள் உட்பட சிறுவர்கள்மீது பாலியற் சுரண்டல்கள் -துஸ்பிரயோகங்கள் வன்முறைகள்- செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது. இதற்கினிமேல் விசாரணைகள் நடக்கும்; பிறகு, ”அமைதி” வழங்கப்போன இன்னொரு நாட்டில் அவர்களது மீறல்களிற்கான தீர்ப்பை ஐ.நாடுகளே பார்த்தும் கொள்ளும்.

இச் செய்திகளும், அதிகாரமும் உடற்பலமும் உடையவர்களான பெரியவர்களின் ராட்சத உலகின் முன், மிகச் சிறிய மனிதர்களான சிறுவர்களது நிராதரவுநிலையையே வெளிப்படுத்துகின்றன.

இன்று - யுத்த தேசங்களை எல்லாம் சமூக நிலையங்கள், அரசுசாரா (NGOs) மற்றும் பிற உதவி வழங்கும் நிறுவனங்கள் சூழ்ந்திருக்கின்றன. எதிர்காலமற்ற பிள்ளைகளின் வாழ்விற்கு அவை முழு உத்தரவாதம் தராதபோதும் உயிர் வாழ்தலின் அடிப்படைத் தேவைகளிற்கு உதவுவதற்கென இருக்கின்றன; அரசுசாரா நிறுவனங்கள் குறித்து பல விமர்சனங்கள் எங்களுக்கு இருக்கலாம், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வேறு தேர்வுகள் இல்லை.

சில வருடங்களிற்கு முன், நண்பர்கள் ஊடாக “உதவி” பற்றிய அறிமுகம் கிடைத்தது. “உதவி” பற்றி வலைத் தளத்தில் பின்வருவாறு இருக்கிறது:

இலங்கையில் யுத்தத்தினாலும், வேறு காரணிகளாலும் தமது பெற்றோர், உறவினர்களை இழந்து அல்லது வருமானம் பெறும் குடும்ப உறுப்பினரை இழந்து சிறுவர் இல்லங்களில் சேர்க்கப்பட்டுள்ள பிள்ளைகளுக்கு, கிடைக்கின்ற உதவியை சேர்ப்பிக்க உதவி- உருவாக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தமிழர்களில் சிலர் இன, மத, மொழி வேறுபாடுகள் கடந்து சமூக அக்கறை கொண்ட வேறும் பல நாட்டவர்களின் ஆதரவுடன் இணைந்து உருவாக்கியுள்ளதே உதவி- இணையம்.

சமூகசேவை என்று வரும் நபர்களே பின்னர் பிரமுகர்களாகிவிடுவதும், நபர்களுக்கூடாகவே செயற்பாடுகள் பார்க்கப்படுவதும், கூட்டு வேலை முறை சிதைந்து தனிநபர்கள் முக்கியத்துவம் பெறுவதும் போன்ற காரணங்களைக் கருத்தில் கொண்டு உதவி- நபர்களைப் பின் தள்ளி செயலை முன்னிறுத்தியுள்ளது.

உதவி- ஒரு நிறுவனமோ, குழுவோ அல்ல. எந்த ஒரு மத நிறுவனத்தினதோ, அரசியல் கட்சியினதோ பிரதிநிதியும் அல்ல; சமூக அக்கறை கொண்டு உதவ முன்வருபவர்களின் உதவியை சிறுவர் இல்லங்களிலுள்ள பிள்ளைகளுக்கு கிடைக்கச் செய்யும் சுயாதீனமான ஒரு வழி மட்டுமே.

இலங்கை அரசினதோ, அரச சார்பற்ற நிறுவனங்களினதோ உதவிகள் போதுமானளவில் கிடைக்கப் பெறாமல், மிகவும் வறுமை நிலையிலுள்ள சிறுவர் இல்லங்களுக்கு உதவி-க்கு கிடைக்கும் நிதியுதவி பகிர்ந்து கொடுக்கப்படுகிறது.
உதவி-யுடனான தொடர்புகளில் சில பெயர்கள் குறிப்பிடப்பட்டாலும், மொழிபெயர்ப்பு, இணையத் தயாரிப்பு, நிதியுதவி, ஆலோசனை, கண்காணிப்பு என்றும் இன்னும் பல வழிகளிலும் உதவி-யில் பங்கெடுக்கின்ற பெயர் அறியாத அனைவரும் உதவி-யின் பொறுப்பாளர்களே.பரீட்சார்த்த முயற்சியாக, முகம் தெரியாமலே கூட்டு வேலைமுறையில் இயங்கும் உதவி-க்கு தலைவர், செயலாளரோ, அலுவலகங்கள், கிளைகளோ இல்லை. கூட்டுவேலைமுறை என்பதும் உதவி ஒரு அரசுசாரா நிறுவனமோ, அமைப்போல அல்ல என்பதும், அதன் “பின்னால்” யார் யார் இருக்கிறார்கள், அவர்களது அரசியல் உள்நோக்கங்கள் என்ன - இந்த குளறுபடிகள் எல்லாம் இல்லாமல், ஒரு போதுநோக்கில் செயற்படுகிற தன்மையும், “உதவி”-யை வேறுபடுத்திக் காட்டியது. பணத்தை சேர்த்து சிறுவர் இல்லங்களுக்கு கொடுப்பது மாத்திரமே “உதவி” செய்கிறது. அது அங்கு போய்ச் சேருகிறதா என்பனவை பணம் தந்தவர்களே சரி பார்த்துக் கொள்ள முடியும். உதவி இணையத்தளம் உட்பட அதன் கட்டுரைகள், குறிப்புகள், சிறுவர்களது படைப்புகளது மொழிபெயர்ப்புகள், சகலமும் தன்னார்வமாக செயற்படுகிற உதவி நண்பர்களாலேயே நடத்தப்படுகிறது. இப்படியொரு சுதந்திரமான, பெயர் முக்கியமற்ற சில தனிநபர்களின் கூட்டுவேலை முறை பிடித்துப் போக, சிறுவர்களது படைப்புகளூடாக நுழைந்த உலகம் பலவிதமான உணர்வுகளை எடுத்து வந்தது.

பூக்களோடும் வண்ணத்துப்பூச்சிகளோடும் திரிந்த நிலங்களில் அவர்கள்

*”பூவே,
எனது அப்பா, அம்மா
எங்கே என்றும் சொல்வாயா?”
என்றும்-

**”கதவைத் திறந்தால்
வெளியே
இறந்த உடல்கள்தான்.
நான் காண விரும்பியதோ
அழகான
பூக்களைத்தான்.”
என்றும்-
தமதான எளிய வார்த்தைகளோடு கடந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு பதில் கிடையாது.

ஆனால் அனர்த்தங்களினூடும் எஞ்சியிருக்கும் சிறிதளவு நம்பிக்கையை, எல்லையற்ற கற்பனையைத் தானும் விரக்தி பறித்திரக் கூடாது என்கிற எண்ணத்தையே அவை தந்துகொண்டிருந்தன.

யுத்த நிறுத்தத் காலப் பகுதியில் (2004) இக் கவிதைகள் இல்லச் சிறுவர்களால் எழுதப்பட்டிருந்தன. பல நண்பர்களும் இலங்கை போன போது, இல்லங்களை பார்வையிட்டு குழந்தைகளுடன் நேரம் செலவளித்து அங்குள்ள நிலமைகள் குறித்து, சிறுவர்களின் மேலதிக தேவைகள் குறித்து, -இணையத் தளத்தில்- எழுதியிருந்தார்கள். பிள்ளைகளிற்கு எழுதப்பட்ட கடிதங்கள், அவர்களது கவிதை,கட்டுரை ஆக்கங்கள் குறித்து உதவி-வாசகர்களிடமிருந்து வந்த கருத்துக்கள் அவர்களிடம் சேர்க்கப்பட்டிருந்தன (தங்கள் மீதான மனிதர்களின் கவனம் (attention) அவர்களை மிகுந்த மகிழ்ச்சிப் படுத்தியது).

யுத்த நிறுத்த காலத்திலேயே உதவியால் சேர்க்கப்படுகிற நிதி குழந்தைகளது உணவுக்கு மாத்திரமே போதுமானதாய் இருந்தது.
இப்போது யுத்தம் ஆரம்பித்து, பிரதான வீதி மூடுபட்ட பிற்பாடு பிள்ளைகளின் நிலமை மோசமாகியிருக்கிறது. உதவி நண்பர் ஒருவர் பிள்ளைகளின் தற்போதைய நிலவரம் குறித்து எழுதியது கீழே:

பிள்ளைகளின் நிலமை கவலைக்கிடம். றோட்டெல்லாம் மூடியிருக்கிற படியா அனுப்பிற காசையே அவையள் எடுக்கிறது கஸ்ரமாயிருக்குது. சாப்பாட்டிச் சாமான்களும் இல்லை. கூடின விலை குடுத்து வேண்ட அவையிட்டை காசும் இல்லை. தை பள்ளிக்கூடம் தொடங்கேக்க பிள்ளையளுக்கு, கொப்பி புத்தகங்கள் வேண்டவே நிறையக் காசு வேணும். காசிருந்தாலும் வாங்கிற நிலமையிருக்க வேணும்.

-பொடிச்சி-
நன்றி:http://peddai.net

Sunday, October 7, 2007

சிட்டுக்குருவிகள்

Thursday, January 13, 2005

செஞ்சோலை - சில அனுபவங்கள்
-டிசே தமிழன்-

நண்பர்கள் பலர் அக்கறையுடன், ட்சூனாமியால் பாதிப்புற்ற குழந்தைகளை தத்தெடுப்பது குறித்து தீவிரமாய் பேசிக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ச்சியான உரையாடல்களின் மூலம் சில உருப்படியான தீர்வுகளையடைந்து, நிர்க்கதியாகியுள்ள குழந்தைகளுக்கு ஏதோ ஒருவகையில் உதவக்கூடலாம் என்ற நம்பிக்கை தெரிகிறது. .......

சென்ற ஆண்டு நடுப்பகுதியளவில், பன்னிரண்டு மாணவர்களாய் வன்னி சென்றிருந்தோம். எங்களால் இயன்றளவு கணணி, ஆங்கிலம் போன்றவற்றை அறிய வாய்ப்புக்கள் குறைந்தவர்களுக்கு சொல்லிக்கொடுப்பதே எங்களின் பயணத்தின் முக்கிய நோக்கமாகும். அவ்வாறே தாயக-புலம்பெயர் உறவாடலையும் வளர்தெடுக்கலாம் என்றும் நினைத்திருந்தோம். ஒவ்வொரு சிறு குழுக்களாக ஒவ்வொரு இடங்களைத் தெரிவு செய்து சென்றோம். நானும், இன்னும் மூன்று தோழிகளும் பெற்றோரை இழந்த பெண்பிள்ளைகளை பராமரிக்கும் செஞ்சோலைக்கு சென்றோம். அது கிளிநொச்சியில் கனகாம்பிகை அம்மன் கோயிலுக்கு அருகில் அமைந்திருந்தது (இப்போது புதிதாய் கட்டிய இடத்திற்கு மாறியிருக்கக்கூடும்). ஒரு ஆணாய் நான் மட்டும் தனித்திருந்தால் ஆரம்பத்தில் பழகுவதற்கு சற்றுத் தயக்கமாயிருந்தது. பிறகு அங்கேயிருந்த சிறுபிள்ளைகளிலிருந்து பெரியவர்களினது அன்பு, நின்றிருந்த நாட்களில் அவர்களில் ஒருவராய் என்னையும் உணரச்செய்திருந்தது. அந்தச்சிறு பிள்ளைகள் காட்டிய அன்பு எழுத்தில் வர்ணிக்கமுடியாதது; இப்போது நினைத்தாலும் நெகிழும் மனதை அவர்களது நினைவுகள் தரும். ......

நாங்கள் நின்றபோது சிறுவயதுக்குழந்தையாக நாலைந்து மாதங்களில் ஒரு குழந்தையிலிருந்து கிட்டத்தட்ட 25 வயதிற்கு கிட்டவான பெற்றோரில்லாத 80 பேர்வரை அங்கே இருந்தனர். இன்னொரு பகுதியானவர்கள் வல்லிபுரத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இதைவிட தனியாக ஆண்களுக்கு வேறிடங்கள் இருந்தன. சின்னப்பிள்ளைகள் எல்லாம் யார் வந்தாலும் மிக விரைவில் சிநேகிதமாகிவிடுவார்கள். ஒரு பிளாஸ்டிக் கதிரையை செஞ்சோலையிலுள்ள மாமரத்தடியில் போட்டு உட்கார்ந்தால் நாள் முழுக்க கதைகள், விடுகதைகள் கேட்டுக்கொண்டேயிருக்கலாம். அவர்களின் பல கதைகள் முடிவேயில்லாது (சொந்தக்கதைகள் அல்ல) விக்கிரமாதித்தன் கதைகள் போல நீண்டபடியே இருக்கும். அதிலும் யார் கதை சொல்வது என்ற குழப்பத்தை தீர்ப்பதே எனக்கு ஒரு கதையாகிவிடும். ஆனால் ஆச்சர்யமாயிருந்தது, சின்னப்பிள்ளைகளின் கதைகளில்கூட இரத்தமும் மரணமும் சர்வசாதாரணமாய் பரவிக்கிடந்ததுதான். ......

நாங்கள் அங்கே தங்கி நின்ற காலத்தில்தான் செஞ்சோலை பற்றிய ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள் (இது குறித்து தனிய ஒரு பதிவு எழுத ஆவல்). எனக்கும் இதில் ஆர்வமும், எடுத்த நண்பர் ஈழத்தில் முக்கிய இலக்கிய ஆளுமை என்பதாலும் அவர்களின் பின்னால் நானும் அலைந்தபடியிருந்தேன். எல்லாம் இயல்பாய் வரவேண்டும் என்பதற்காய் அந்த நண்பரும் அவர் குழுவினரும் எடுத்துக்கொண்ட் பொறுமையிலிருந்து நான கனக்க கற்றுக்கொண்டேன். அந்த ஆவணப்படத்தில் முக்கியமாய், ஓரளவு தங்களது நிலையறிந்த பெண்களிடம் அவர்களது கதையைக்கேட்பதாய் இருந்தது (அனைத்தும் ஆவணப்படத்தில் வராது என்று நினைக்கிறேன்). கிட்டத்தட்ட O/L எடுத்துக்கொண்டிருந்த, எடுத்துமுடிந்த பெண்களிடமே அவர்களது கடந்தகால வாழ்க்கை, எதிர்காலம் பற்றி தயக்கமில்லாது பேசும்படி சொல்லி பதிவுசெய்யப்பட்டது. கேட்ட கதைகள் எல்லாம் கவலையும் கொடுமையும் நிறைந்தவை. அவற்றையெல்லாம் பதிவு செய்தலும் நல்லதல்ல. ஆனால் ஒரு விடயம்தான் என்னை யோசிக்கவைத்தது. ஒரு வருடத்திற்கு முன்னர்வரை செஞ்சோலையிலிருக்கும் பிள்ளைகளுக்கான படிப்பு முழுவதும் செஞ்சோலை வளாகத்திலேயே கற்பிக்கப்பட்டது. கடந்த ஒருவருடமாகத்தான் அவர்கள் மற்றப்பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்கவிடப்படுகின்றனர். இரண்டு மூன்று கல்லூரிகளில் இந்தப்பெண்கள் படித்துக்கொண்டிருக்கின்றனர். காலையிலும், மாலையிலும் பஸ் வந்து ஏற்றி இறக்கிக்கொள்ளும். ஆனால் வியப்பான விடயம் என்னவென்றால், வெளியில் சென்று படித்துக்கொண்டிருக்கும் பல பெண்களுக்கு அப்படிப்போய் படிப்பது பிடிக்கவில்லை. அதிகமானோர் பேசும்போது தங்களுக்கு உள்ளுக்கு இருந்து படிப்பதே விருப்பமானது என்று கூறினார்கள். இதே மாதிரி ஒரு கேள்வியை இங்கிருக்கும் தோழியிடமும் கேட்டது நினைவில் வந்தது. ஏன் பல்கலைக்கழகத்திற்காய் தொலைவு சென்று படிக்கவில்லை என்று வினாவியபோது, தெரிந்த சூழல், பெற்றோர் என்று பாதுகாப்பான சூழலைத்தான் பெண்கள் மனம் விரும்பும், ஆண்களைப்போலல்ல என்று கூறியிருந்தார். அப்படியான பாதுகாப்பு, இயல்பான சூழ்நிலைத்தான் மனதில் வைத்து செஞ்சோலைப்பிள்ளைகளும் கூறியிருக்கலாம். ..........

செஞ்சோலையில் சின்னக்குழந்தையிற்கு பல்லுக்கொளுக்கட்டை கொட்டியதிலிருந்து, அங்கிருந்த ஒருவரிற்கு திருமணம் நடந்தவரை பல நிகழ்வுகளை நேரில் பார்த்திருக்கின்றேன். ஆரம்பகாலத்தில் பெண் வயதிற்கு வருவதை சடங்காக கொண்டாடியதாகவும் அதை இப்போது முற்றுமுழுதாக இல்லாமற்செய்துவிட்டதாகவும் சொன்னது சந்தோசமாயிருந்தது. வெளிநாட்டிலிருந்து ஒரு ஆய்வுக்காய் ஒரு பெண்மணி அங்கே அடிக்கடி வருவார். தனது ஆய்வின் முடிவுகள் குறித்து அவ்வவ்போது கலந்துரையாடுவர். முக்கியமாய், இந்தப்பிள்ளைகளை பெண்போராளிகளே பராமரிப்பதால் அவர்களின் ஆளுமை/செல்வாக்கு இந்தக்குழந்தைகளுக்கும் வரும் ஆபத்து இருப்பதாய் கூறினார். அதை பராமரிக்கும் பெண்போராளிகள் கவனமாய் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு எதிர்வினையாய் ஆவணப்படம் எடுத்த நண்பர் சில கருத்துக்களை முன்வைத்தார். 'இங்கிருந்து பெண்கள் திருமணம் செய்துகொண்டு போகிறார்கள். ஆசிரியர்களாக, பத்திரிக்கை நிருபர்களாக, காவல்துறையினராக எல்லாம் பல்வேறு பரிணாமங்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒற்றைப்படையாக அப்படிச்சொல்ல முடியாது என்று'. செஞ்சோலையிலிருந்தும் போராளிகளாகப்போயிருக்கிறார்கள். மரணித்துமிருக்கிறார்கள். அங்கே நின்றபோது அப்படிப்போராளிகளாக சென்றவர்களை சந்திருக்கிறேன். செஞ்சோலையிலிருந்து இயக்கத்திற்கு சேருவது என்றால் எடுக்கமாட்டார்கள். இவர்கள் கள்ளப்பெயர் சொல்லி, கள்ள இடம்சொல்லி ஒருமாதிரி சேர்ந்திருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்கூட அப்படி கூட்டாகப் போனவர்களை திருப்பி அழைத்து வந்திருந்தனர். .........

அங்கேயிருக்கும் வளங்களோடு ஒப்பிடும்போது செஞ்சோலைப்பிள்ளைகள் நன்றாக பராமரிக்கப்படுகின்றனர் என்றுதான் சொல்லவேண்டும்.. அவர்கள் உடை அன்பளிப்புக்கொடுப்பது என்றால் புதிய உடைகள் மட்டும்தான் கொடுக்கவேண்டும் என்று புலிகளின் தலைமைபீட உத்தரவு இருக்கிறது. எவரும் செஞ்சோலைக்குள் இலகுவில் நுழைந்துவிடமுடியாது. வருபவர் எவர் என்றாலும் ஒரு குடில்தான் தங்கவைக்கப்பட்டு அங்கேதான் மற்றவர்கள் சென்று சந்திக்கமுடியும். நான் இரவில் செஞ்சோலைக்கு அருகிலிருந்த ஓர் இடத்தில் தங்கியிருந்தபடியால் யாரவது ஆண்போராளிகள் என்னை அந்த இடத்திலிருந்து செஞ்சோலையில் மோட்டார்பைக்கிளினால் இறக்கினாலும் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்திற்கு அப்பால் அவர்களும் வருவதில்லை. .......

ஆரம்பத்தில் ஏதோ ஆசிரியர்கள் மாதிரி மதிப்புத்தந்த செஞ்சோலைப்பிள்ளைகளிடம் நாங்களும் உங்களை மாதிரித்தான் என்றபிறகு நெருக்கமாய் பழகி அந்த மாதிரி பகடி பண்ணுவார்கள். நிற்கும் வேலையில் எல்லாம், எலுமிச்சை juice, இளநீர், பிஸ்கட் என்று ஓரே சாப்பாடுதான். அதுவும் யாராவது புதிதாய் ஆக்கள் வந்தால், அவர்களின் சாட்டில் இன்னும் கூடக் கிடைக்கும். உண்மையில் அங்கேபோய்தான் மூன்று நேரம் ஒழுங்காய் சாப்பிடப்பழகினேன். கனடாவில் என்றால் இரண்டு நேரந்தான், அதுவும் அரைகுறைதான். இதையெல்லாம் கேட்டபின் என் அண்ணாமார்கள் சொன்னார்கள், ஏதாவது செய்துவிட்டு வாவென்றால், இப்படி அங்கே கஷ்டப்படுகின்ற சனங்களின் சாப்பாட்டை வெட்டிவிட்டு வந்துவிட்டாய் என்று சொன்னார்கள். சரி அங்கே நடந்த நகைச்சுவைகளில் ஒன்றைச் சொல்கிறேன். ஜெனரேட்டர் போட்டு வரும் மின்சாரத்தில்தான் கணணியை இயக்கமுடியும். அதிகமாய் யாரவது ஆண்போராளிகள் ஜெனரேட்டரை இயக்கிவிடுவார்கள். கிட்டத்தட்ட மூன்று நான்கு மணித்தியாலங்கள்தான் தொடர்ந்து பாவிக்கமுடியும். ஒரு முறை ஆண்போராளிகள் எவரும் இல்லாததால், சரி நாங்கள் போய் start செய்வோம் என்று போனோம். எனக்கு முதலே தெரியும், என்ரை நோஞ்சான் உடம்பைக்கொண்டு அதை இயக்கமுடியாது என்று. ம்கூம் எவ்வளவு கஷ்டப்பட்டும் இயக்கமுடியவில்லை. இதைப்பார்த்துக்கொண்டிருந்த ஏழாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு பெண் சொன்னார், 'இவ்வளவு நாளும் உங்களுக்கு teaயும் பிஸ்கெட்டும் கொண்டுவந்து தந்தது எல்லாம் waste' என்று.

-DJThamilzhan-
நன்றி:http://djthamilan.blogspot.com

Saturday, October 6, 2007

Sightless victim of a blind bombing

By: S. Somitharan

One morning in 1995, five-year-old Selvanayagam Sasiraj was playing outside his house. His father, a mason, had gone to work, but Sasiraj’s mother, Pathmawathi, was home; so was Sasiraj’s elder brother, Chandrasekaran. Their home was adjacent to the Navaly Roman Catholic Church.

Military operations were in progress and armed aircraft were circling. Realising perhaps they were circling a zone almost over the house and growing anxious of what it portended, Pathmawathi had asked the boy to get into a bunker.

“Before I could I could run bombs began falling. Suddenly there was a tremendous explosion. That is all I remember till I woke up in hospital,” said Sasiraj, now 12 years old.He has lost his sight completely.

It was this bomb the ICRC reported had been dropped on civilians who were herded together in the church taking refuge from military operations. And in the wake of the negative fallout alleging the air force had engaged in an act that could be interpreted a war crime, Lakshman Kadirgamar, the then minister of foreign affairs, went on to chastise the ICRC, stating the bomb was not targeted on refugees in the church, but on an LTTE facility nearby. He said the bomb had inadvertently exploded in the church’s compound. Others, however, dismiss the argument as preposterous.

Pathmawathi died, but Chandrasekaran escaped virtually unscathed. Today Sasiraj’s father supports Chandrasekaran through his meagre earnings, while little Sasiraj is at Valvagham home for the visually handicapped.

The history of Valvagham, now situated at Maruthanamdam, Jaffna, and the trials the organisation and its administrators had to put up with are as heartrending in the tragedy, but also as encouraging in their persistence and fortitude, as the personal story of Sasiraj and the 30 other visually handicapped inmates of that institution.Valvagham has led a peripatetic existence. It has had to move out whenever military operations threatened the security of the institution and the lives of the children. The last of these relocations was in 1995 when the home was in Uduvil, but had to be vacated due the to shelling and fighting at close quarters.

“We were so handicapped we had to take these children who cannot see, walking to Tellipalai to safety,” said one who had been there and experienced it all.Interestingly, the permanent building the home occupied at Uduvil has now become part of the military complex of 513 Brigade, which took it over after Valvagham’s vacation. It has been acts such as these, done with scant regard to human suffering that has prompted the LTTE and the Tamil public to demand the army vacate private property it has acquired in high security zones and outside.

Around 1997 persons working with Valvagahm visited what had been their home at Uduvil, now turned into 513 Brigade’s military complex. There were only a few benches that belonged to the home remaining, which the visitors had requested be returned to them since they were in the process of building a new home at Maruthanamadam. But the army refused.

Despite such cussedness there were sections of the government that was prepared to help. Relief and Rehabilitation Authority of the North (RRAN) put up the new building for the home at Maruthanamadam; UNICEF constructed the water tank and Hindu Culture Affairs Minister T. Maheswaran donated a trishaw. ‘Official’ assistance for building up movable and immovable property is largely confined to these.

The bulk of the donations even today come from individuals. And this, mind you, in a Jaffna that had been wracked by war, displacement and terror till the ceasefire agreement was signed in February 2002. If funding from these sources were to dry up, the institution might have to close. “The people who were displaced with us and bore the brunt of our privation know our problems and continue to support and make contributions towards the home’s welfare,” said Annaluckshmy Sinnathamby, who runs the home and whose brainchild Valvagham is.

The sacrifice and personal commitment that has gone into setting up and running Valvagham borders on the fantastic. It began in 1971 as a school that taught children with visual impediments. By 1988 with the war for Eelam having undergone various phases and military engagements and economic deprivation causing tremendous distress, it was decided Valvagham be transformed into a home, where children did not study but were resident.

A private house was acquired at Tellipalai for the home. Valvagham was there till 1990. The first round of displacement came that year due to military engagements as the army began expanding the perimeter of its Palaly camp, which has now become the high security zone. Expecting the worst, the children were sent home.

The home was resurrected in 1993 at Uduvil, where a permanent building was constructed. When displaced in 1995 in the wake of Operation Riviresa the home was in transit in Manipay briefly, before being relocated at its present premises at Maruthanamadam.

Though Valvagham has evolved into a home from a school, education forms the core of the institution’s focus. The inmates do not attend special schools for the visually handicapped. They go to regular schools in the area such as the Maruthanamadum Ramanathan College for girls and Union College, Telipalai for boys.

The schools, besides allowing these children with special needs to use Braille offers them much the same facilities (or the lack of them) as it does other children; in other words they are shown no distinction, but encouraged to be part of the school as everyone else. However, education is one of the most important reasons why the children are encouraged to stay at Valvagham.

“We are displaced because of the war. I am at Valvagham because my parents want me to study and come up in life,” said Selvam Jeyaparathi (11), who was part of the exodus to the Vanni in 1995. Jeyaparathi who is an epileptic got an attack due to exposure and fatigue. There was no medical aid available and her optic nerve was affected. She is visually handicapped too.

The success of Valvagham in encouraging learning and instilling discipline that is required for academic excellence is seen by four youths, both boys and girls, from the institution following undergraduate courses at the University of Jaffna. But academic excellence is but a part of the enormous talent the resident’s at Valvagham display. Some of them are musically inclined, while others are gifted in the other arts.

Though superficially the lot of these children might appear better than the orphans who have no one to parents to turn to, the fact is it is not really so. Many of the inmates’ families have lost breadwinners that make them desperately poor so that a child at Valvagham means one mouth less to feed. In the case of others like Sujith, whose mother was killed, it leaves the home with an acute lack of the emotional support that is vital for viable family life.Similarly, atavistic and almost barbarous social beliefs in Jaffna, render the visually handicapped inauspicious and/or their families as objects of ridicule and exclusion. This forces parents to use the first available opportunity to palm off their children to a home or some other facility, which will relieve parents and families the anxieties of bringing up ‘special needs’ children.

The allocation of each child in Valvagham’s budget is Rs.300 per day, which goes for food, clothes, school requirements and extra-curricular activities such as music lessons. This works out approximately Rs.90, 000 per month for the 30 inmates. The single biggest block sum of money comes from the government that works out to Rs.300, per child, per month. In other words, the state looks after just three days of a child’s requirement in a month. The balance is from private generosity and goodwill.

The tragedy of the children’s lives will however need much more Rs.90, 000 a month. Some cases involve more than one in a family who is handicapped for life due to the war and its indescribable horrors.

Way back in 1994, Ravindrapalan, a fisherman from Gurnagar, brought home one day with his haul from the sea, a shiny rounded object. It was a present to his six children including Gnanaseelan, Lambert Ravindran and Marie Stella. Their mother who was reluctant to give the children what had lain so long in the sea, washed the object with soap and water to disinfect it before allowing the children play.The children rolled the spherically shaped article during their play. One afternoon coming home from school, they wanted to break the seashells they had collected. The shells had to be broken by dashing a heavy object on them. There was nothing else around, so Ravindran Lambert took the round heavy object they had played with in his little hand and brought it down with all his might on the shells. It exploded.

Lambert lost his hand and his sight partially, so did his elder brother Gnanaseelan due to the exploding mine. Marie Stella, hovering closest over the ‘plaything,’ lost sight of both her eyes completely. All had three had shrapnel and burn injuries all over their bodies. Incidentally, one of the other siblings, a one-year-old, was nearby too but escaped because she was crouching under a chair and the force of the blast moves upwards.

Marie Stella and Lambert were admitted into Valvagham in 1997, but Gnanaseelan came only in 2000. Though the two boys can still see, it is limited to recognising vague shapes and doctors say their sight continues to deteriorate. Marie Stella’s world is completely dark.“I do not mind my own condition, but I am worried about my sister – she has lost both her eyes,” said Gnanaseelan (15).

Marie Stella (12) is an active girl who when told about our photojournalist Buddhika Weerasinghe’s camera, held it to her eye and clicked. But all of a sudden she fell very, very silent.

“She is grieving about our eldest brother – he has gone to join the LTTE. She is very attached to him and took his departure badly,” confided Gnanaseelan.

The eldest boy had run away to join the LTTE in May 2002. Due to the entreaties of his parents he had returned to the family fold. But in September he went back – this time no entreaty could coax him away.

Marie Stella wants to become a teacher. She said, “Only the eldest of my brothers could see. He was studying; he could have helped us to study too. But now he is also not there for us…”

Thanks to Northeastern Herald
2003 May 09 - May 15

Friday, October 5, 2007

இலங்கையில் ஆங்கில மொழிமூலக் கல்வி

-சாரதாஞ்சலி மனோகரன்-

ஆங்கிலம் ஒரு சர்வதேச மொழியாகக் கருதப்படும் இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்பம் மற்றும் தொழில் ரீதியான உலகின் திறவுகோலாக ஆங்கிலம் இருக்கின்றது. உலகின் பல நாடுகள் ஆங்கில மொழிமூலக் கல்வி முறைமையினை நடைமுறைப்படுத்தி வந்தாலும் இலங்கை போன்ற சில நாடுகளில் தாய்மொழிமூலக்கல்வி முறைமையே நடைமுறையில் உள்ளது. இலங்கையின் வரலாற்று பின்னணியை நோக்கும் போது பிரித்தானிய காலனித்துவ ஆட்சிக் காலம் முக்கிய இடம் வகிக்கிறது. இக்காலப்பகுதியில்தான் இலங்கையின் பொருளாதார சமூக, கலாச்சாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. அந்த வகையில் கல்வித்துறையில் குறிப்பிடத்தக்கது ஆங்கில மொழிமூலக்கல்வியின் அறிமுகம் ஆகும்.

இதற்கு 1831 ஆம் ஆண்டு கோல்புறுக் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட கல்விச் சீர்திருத்தங்கள் வித்திட்டன. டி.எஸ்.சேனநாயக்கவின் ஆட்சிக் காலத்தில் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்ட எச்.டபிள்யூ.ஹோவஸ் என்பவரின் A தரப் பாடசாலைகள் நவீன அறிவுடன் கூடிய ஆங்கிலக் கல்வியைப் போதித்தன. கிறிஸ்தவ மதத்தைப் பரப்பும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்ட மிஷனரி பாடசாலைகளின் தோற்றம் ஆங்கில மொழிமூலக்கல்வியை இலங்கை எங்கனும் பரப்பியது. இலங்கையின் சனத்தொகையில் 8 வீதமாக இருந்த தமிழர்கள் 90 வீதமாக இருந்த A தரப் பாடசாலைகளில் கல்வி கற்றனர். பல்வேறுபட்ட காரணங்களுக்காக அதிகளவு கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள் சிங்கள பிரதேசங்களுடன் ஒப்பிடும் போது தமிழ்ப்பிரதேசங்களிலேயே அதிகளவாக நிறுவப்பட்டன. 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வடமாகாணம், இலங்கையின் 20 வீதமான ஆங்கில மொழிமூலப் பாடசாலைகளைக் கொண்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. 1972 ல் வடமாகாணத்தில், 6 மாணவர்களில் ஒருவர் ஆங்கில மொழிமூலப் பாடசாலையில் கல்வி கற்றிருந்த அதேவேளை, தேசிய சராசரி விகிதமாகிய 1:10 உடனும் ஏனைய மாகாணங்களின் விகிதங்களுடனும் ஒப்பிடும்போது இது மிக உயர்வானதாகும்.

1960 களில் இலங்கையின் பல்கலைகழகத்தில் விஞ்ஞானம் மற்றும் மருத்துவ துறைகளில் தமிழ் மாணாவச் சமூகத்தின் ஆதிக்கம் இருந்து வந்தது. தமிழ்- விஞ்ஞான பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு சிங்கள கலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பிலும் அதிகமாக இருந்தது. நிர்வாக வேலைவாய்ப்புகளுக்காக நடாத்தப்பட்ட பரீட்சைகளில் தமிழர்களே முதன்மை வகித்தமையால், வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இது அன்றைய அரசியலில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

1943 இல், இன்று இலவசக் கல்வியின் தந்தை என அழைக்கப்படும் சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கராவின் கல்வி மறுமலர்ச்சி, சிங்கள சுயபாசைக்கு ஆதரவான அறிவாளிகளின் சமூகத்தின் மத்தியில் ஆங்கில மொழியாக்கம் எனும் நாணயத்தின் இரு பக்கங்களான கலாசார மற்றும் பொருளாதாரச் சுரன்டல்கள் பற்றிய தெளிவான அறிவை ஏற்படுத்தியது. இச் சமூகத்தின் அரசியல் சக்தி எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவை 1956 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்த்தியது.

சுதந்திரத்தின் பின்னரும் ஆங்கில அரச கரும மொழியக்கப்பட்டமையால் தவிர்க்கப்பட்ட சுதேச மொழியில் கல்வி கற்ற பெரும்பான்மைச் சமூகத்தின் நியாயமான மனத்தாங்கல்களை சிங்கள அரசியல் தலைமை தனது சுயநலத்துக்காக உபயோகித்தது. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க மற்றும் பிலிப் குணவர்த்தன ஆகியோர் ஆங்கில மொழியின் மேலாதிக்க அடிமைச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த சுதேசிய பொருளாதார மற்றும் கலாசாரத்தை விடுவிப்பதாக உறுதி கூறினர். இதே சமயம் தெற்கிலே வேரூன்றிய தமிழ்த் தலைமைகள் ஆங்கிலத்துக்குப் பதிலாக சிங்களம் அரச கரும மொழியாக்கப்படுவதைத் தவிர்க்க முயற்சி செய்தனர். இம்முயற்சிக்கு, ஆங்கில மொழிக்கு ஆதரவான சிங்கள வாக்காளர் சமூகத்திடம் இருந்து உதவி கிட்டிய போதும் அது வெற்றியளிக்கவில்லை. 1956ஆம் எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்காவினால் தனிச் சிங்களச் சட்டம் கொண்டுவரப்பட்டது. சிங்களம் அரச கரும மொழியாக்கப் பட்டது. பிலிப் குணவர்த்தன மற்றும் டி.பி. இலங்கரட்ன ஆகியோர் கிராமிய பொருளாதாரம், கிராமிய முதலீட்டு விருத்தி, கிராமிய வங்கியின் முதலீடு, கிராமிய தொடர்பாடல், கிராமிய வர்த்தகம், கிராமிய நிலச்சீர்த்திருத்தங்கள் ஆகியவற்றை மீள் கட்டமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். சிங்களம் அரச கரும மொழியாக்கப்படாதிருந்தால் இம்முயற்சிகள் சாத்தியப்பட்டிருக்காது.

இது உத்தியோகபூர்வமற்ற பொருளாதாரத்தின் பாரிய வளர்ச்சிக்கு வித்திட்டது. எனினும், தனிச் சிங்களச் சட்டம் இனவாதத்திற்கு வித்திட்டது. சாதிப்பாகுபாடுகள், சமூக வேற்றுமைகளை தோற்றுவித்தது. வேலையில்லாத கல்விச் சமூகத்தை உருவாக்கியது. அரச உத்தியோகங்களில் சிங்களவர்களுக்கு முன்னுரிமை வளங்கியது. இத்தனிச் சிங்களச் சட்டம் மற்றும் பாடசாலைகள் தேசியமயமாக்கப்படல், 1960 களில் நடைமுறைக்கு வந்த தாய்மொழிமூலக் கல்விமுறைமை ஆகிய ஆங்கில மொழியை இரண்டாம் பட்சமாக்கின. மிஷனரிப் பாடசாலைகள் அரசாங்கத்தால் சுவீகரிக்கப்பட்டதுடன் எல்லாப் பாடசாலைகளிலும் தாய்மொழி மூலக்கல்வி நடைமுறைக்கு வந்தது. பல்வேறு அரசியல் நோக்கங்களுக்காக அரசியல்வாதிகள் பின்தங்கிய மற்றும் கிராமிய மக்கள் மத்தியில் ஆங்கிலம் மீதான ஒரு வெறுப்பை உண்டு பண்ணின. இதனால் இரண்டாம் மொழியாக்கப்பட்ட ஆங்கிலம் படிப்படியாக ஒதுக்கப்பட்டது.

கிராமியச் சிங்களவர்கள், கிழக்கு முஸ்லிம்கள், மலையகம் வாழ் இந்திய வம்சாவளித் தமிழர்கள், இலங்கையின் சனத்தொகையில் 80 சதவீதத்தினை கொண்டிருப்பினும், முதற்தர கல்வியினதும், ஆங்கிலத்தினதும் நன்மைகளை பெற முடியாதவர்களாக இருக்கின்றனர். ஏனைய இனத்தவரிலும் பார்க்கத் தமிழர்களால் சிறப்பாக செயற்பட முடிந்தது. இதற்கான முக்கிய காரணம் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் இருந்து வரும் மூத்த தலைமுறையினரின் கல்விப் பின்னணி இளைய தலைமுறையினரின் கல்வியில் செலுத்தி வந்த ஆதிக்கமே ஆகும்.

தனிச் சிங்களச் சட்டத்தின் குறுகிய நோக்கை இப்போது தான் அரசு உணரத் தொடங்கியுள்ளது. இன்றைய இளம் சமுதாயமும், இலங்கையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அதிகாரபூர்வமாக ஒதுக்கப்பட்ட ஆங்கில மொழியின் தேவையை உணரத் தொடங்கியுள்ளது.

தகவல் தொழில்நுட்பம், மற்றும் பணரீதியான கொடுக்கல் வாங்கல்களின் மொழியாக மட்டுமல்லாது, உயர் கல்வி, பல்வேறு தொழில்வாய்ப்புக்கள் மற்றும் உயர் வருமானம் ஈட்டும் தொழில்களுக்கான திறவுகோலாகவும் செயற்படுகிறது. ஆங்கிலம் இல்லாமல் இன்றைய உலகில் எதையும் சாதிக்க முடியாது என்பது யதார்த்தம். இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையும் ஆங்கில மொழிமூலக் கல்வியை பிரபலமடையச் செய்துள்ளது.

பிந்திய ஞனம் பெற்ற இன்றைய அரசு ஆங்கில அறிவு அனைவருக்கும் அவசியம் என்பதை உணர்ந்துள்ளது. சந்திரிக்கா அரசினால் முன்மொழியப்பட்ட கல்விச் சீர்திருத்தத்தின்படி 2001 ஆம் ஆண்டில் உயர்தர விஞ்ஞான பிரிவிற்கும் 2002 இல் தரம் 6க்கும் 2003 இல் தரம் 7 க்கும் ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழிமூலக் கல்வி உயர்தர விஞ்ஞானப் பிரிவிற்கு 84 பாடசாலைகளில் அறிமுகப்படுத்தப்பட்டாலும் 40 பாடசாலைகளே தொடர்ந்து நடைமுறைப்படுத்துகின்றன. 2002 இல் 150 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கில மொழிமூலக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டதுடன் எந்தப் பாடசாலையும் இடைநிறுத்தவில்லை. அத்துடன் 2003 ஆம் ஆண்டு மேலும் 300 பாடசாலைகளில் தரம் 6 க்கு ஆங்கிலமொழி மூலக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இத்தகைய திட்டங்கள் இலங்கையில் ஆங்கில அறிவுடையோர் சதவீதத்தை நிச்சயமாக அதிகரிக்கும். அத்துடன் விஞ்ஞானக் கற்கைகளைத் தாய்மொழியில் கற்கும் போது உருவாகும் தடைக்கற்களெல்லாம் இலகுவில் தகர்த்தெறியப்படும். இதனால் விஞ்ஞானம் இலகுவில் யாவரையும் சென்றடையும் அத்துடன் புத்தகங்கள் நற்றும் விஞ்ஞான தொழில்நுட்டபப்பதங்களை தாய்மொழிக்கு மாற்றுவதில் ஏற்படும் சிக்கல்கள் தவிர்க்கப்படும். அத்துடன் விஞ்ஞானக் கல்வியானது தேசிய அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு ஒரு முக்கிய கருவியாக கருதப்படுவதால் ஆங்கில மொழிமூலக் கல்வி விஞ்ஞானக் கல்வியை இலகுவாக்கும்.

ஆனால் இத்தகைய திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது பல நடைமுறைச் சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். அவற்றுள் முக்கியமானது ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையாகும். தனியே ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர் தொகையே குறைவாக உள்ள நிலையில் அனைத்து பாடங்களையும் ஆங்கிலத்தில் கற்பிக்கும் ஆசிரியர்களை தேடுவது சற்றுக் கடினமான விடயமே. அத்துடன் ஆங்கில மொழி ஆசிரியர்களினால் ஏனைய பாடங்களில் பூரண விளக்கத்தை வழங்க முடியாமையும் முக்கியமானது. உயர்திறனற்ற ஆங்கில ஆசிரியர்களை வைத்து ஆங்கில மொழிமூலக் கல்வியை நடைமுறைப்படுத்தும் போது, மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் மேம்படுத்தல் குறைக்கப்படுவதுடன் கற்பிக்கப்படும் பாடத்தின் தராதரமும் குறைக்கப்படும்.

இதனை நிவர்த்தி செய்ய இன்று அரசாங்கம் ஆசிரியர்களுக்கான பயிற்சிப்பட்டறைகள் பலவற்றை நடாத்திவருகின்றது. ஆனால் சுயபாஷைக் கொள்கையும் கன்னங்கரவின் சீர்திருத்தங்களும் நடைமுறைப்படுத்தபடாதிருந்தால், இன்று அரசு இத்தகைய பயிற்சிப்பட்டறைகளுக்கு செலவிடும் பல பில்லியன் ரூபாய்களை வேறு அபிவிருத்திக்குப் பயன்படுத்தி இருக்கலாம் அல்லது ஒப்பந்த அடிப்படையில் தரம் வாய்ந்தவர்களை பிறநாடுகளில் இருந்து வரவழைத்து உள்ளூர் ஆசிரியர்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்கலாம்.

இம்முயற்சிகள் வெற்றிகரமாக்கப்பட தனியார் மற்றும் அரச-சார்பற்ற துறைகளின் பங்களிப்பு அவசியமாகிறது. அரசின் கையில் இருக்கும் இலங்கையின் கல்வி அரசின் பிடி தளர்த்தப்பட்டு தனியார் துறையை நோக்கி தள்ளப்படலாம். கல்வித்துறையில் தனியாரின் ஆதிக்கம் அதிகரிகப்பட இலவசக் கல்வி முறைமை நடைமுறைப்படுத்தப்பட முடியாமல் போகும். இதனால் அக்கல்வியை பெறுவதற்கான செலவு எல்லோராலும் ஈடுசெய்யப்பட முடியாதது ஆகும்.

இன்றைய சூழலில் "ஆங்கிலமொழிமூலம்" எனும் பதம் கல்வித்துறையில் உள்ள வர்த்தகர்களால் பயன்படுத்தப்படும் ஒரு விளம்பர உத்தியாகும். தமது கல்வி நிலையத்தை பிரபல்யப்படுத்துதலையும், நன்கொடைத் தொகையை அதிகரித்தலையும் முக்கிய குறிக்கோளாகக் கொண்டே மேற்கூறிய பதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சர்வதேச பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்ப முடியாத, ஆங்கில மொழிமூலக் கல்வியை வீட்டில் வழங்க முடியாத நடுத்தரவர்க்கப் பெற்றோர்கள் மத்தியில் ஆங்கில மொழிமூலக் கல்விக்கான தேவை அதிகமாகவே இருக்கிறது.

தனியார் மற்றும் சர்வதேச பாடசாலைகள் மாணவர்களுக்கு உயர்மட்ட ஆங்கிலத்திறன் வழங்கலை கையாள்கின்றன. இதற்கான ஒரு காரணம் சகல பாடங்களும் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படுதல். மற்றையது சம்பந்தப்பட்டவர்களின் சகல சமூகக் கலாச்சாரச் செயற்பாடுகளும் சூழலும் ஆங்கிலம் சார்ந்தனவாக இருத்தலாகும். இது இலங்கை போன்ற கீழைத்தேய நாடுகளினால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைமை ஆகும்.

ஒரு அந்நிய மொழியைக் கற்கும் போது மொழிமூலம் அதே மொழியாக இருத்தல் கற்றலை இலகுவாக்கும்.எவ்வளவு தூரம் அம்மொழி காதால் கேட்கப்படுகிறதோ அவ்வளவு தூரம் கற்றலும் இலகுவாக்கப்படும்.ஆனால் இலங்கையைப் பொறுத்த வரையில் ஆங்கிலம் தத்தமது தாய் மொழியினாலேயே கற்பிக்கப்படும்.

இலங்கை போன்ற பல்தேசிய அடையாளங்களை உடைய மக்கள் வாழும் நாட்டில் ஒரு பொது மொழி இருப்பது அவசியமாகிறது.அத்தகையதொரு பொது மொழியான ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் வழங்கப்படாமை பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனத்தவரிடையே ஒரு பெரும் இடைவெளியைத் தோற்றுவித்தமை கண்கூடு.முன்னைய நாட்களில் ஆங்கிலமொழிமூலம் வழக்கில் இருந்தபோது வெவ்வேறு மொழிபேசும் சமூகங்களுக்கிடையில் ஒரு தொடர்பாடல் ஊடகமாக அது செயற்பட்டது.சிங்கள,தமிழ்,முஸ்லிம் மாணவர்கள் ஒரே வகுப்பில்,ஒரே பாடசாலையில் கல்வி கற்றனர்.அவர்களிடையே ஒரு புரிந்துணர்வு காணப்பட்டது.

ஆனால் இப்பிரச்சினைக்கு ஆங்கில மொழிமூலக் கல்வியே தீர்வாகாது. எமது தேவை தமிழர், சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் இடையே இலங்கையர் எனும் தேசிய அடையாளத்தைக் கட்டியெழுப்புவதற்கு துணைபுரியக்கூடிய ஒரு கல்வித்திட்டமே. ஒரு தேசிய அடையளத்தின் கீழ் தொழிற்படும் பல்வேறு இன அடையாளங்கள் என்பது ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது. இத்தகைய ஒன்றிணைந்த கல்வித்திட்டம் ஆங்கில மொழிமூலக்கல்வியினால் மட்டும் உருவாக முடியாது. சகல இனங்களுக்கும் இடையிலான தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் அதேவேளை தத்தமது தாய்மொழியில் கற்பற்கான சிறுவரின் பிறப்புரிமையும் மறுக்கப்பட முடியாதது.

இலங்கையைப் பொறுத்தவரையில் ஆங்கிலம் கொண்டுள்ள வரலாற்றுத் தொடர்புடைமைகளை உற்று நோக்குகையில், அதுவும் இன்றைய காலகட்டத்தில் ஆங்கிலம் தமிழ்-சிங்கள இனங்களுக்கிடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பயனுள்ள தொடர்பாடல் ஊடகம் என்பதில் எதுவித ஐயமுமில்லை. ஆனால் தமிழ்-சிங்கள புரிந்துணர்வு என்பது தமிழ்-சிங்கள மொழிகளினால் உருவாகும் போது தான் அது வினைத்திறன் மிக்கதாகும்.

நன்றி: இளந்தென்றல்-2006
தமிழ்ச்சங்கம்
கொழும்பு பல்கலைக்கழகம்

Thursday, October 4, 2007

பெருந்தோட்ட தேசிய பாடசாலைகளும் அதிபர், ஆசிரியர் இடமாற்றங்களும்.

-மௌனி-

ஒரு நாட்டின் தேசிய குறிக்கோள்களையும், கலாசார விழுமியப் பண்புகளையும், சமூக மட்டத்தில் விருத்தியடையச் செய்வதில் பாடசாலைகளின் பங்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அந்த வகையில் தேசியப் பாடசாலைகள், மாகாணப் பாடசாலைகள் என்று வேறுபடுத்திக் காணப்பட்டாலும் அனைத்து பாடசாலைகளிலும் இடம்பெறும் நிர்வாக முறைகள், ஆசிரியர்களின் கற்பித்தல் விடயங்கள் உட்பட அனைத்து விடயங்களும் ஒரு நாட்டின் தேசியத்தை நோக்கியதாக இருத்தல் வேண்டும்.

அதன் அடிப்படையில் எமது நாட்டில் காணப்படும் 9727 பாடசாலைகளுள், 324 தேசியப் பாடசாலைகளும், 84 நவோதயப் பாடசாலைகளும் காணப்படுவதாக மேற்கொள்ளப்படும் அறிக்கைகள் மூலம் அறியப்படுகின்றது. இருந்தும் எமது மலையக பெருந்தோட்ட சமூகத்தை பொறுத்தவரையில் தமிழ்மொழி மூலமான தேசியப்பாடசாலைகளின் எண்ணிக்கை மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது. அதிலும் மத்திய மாகாணத்தை பொறுத்தவரையில் இரண்டே இரண்டு தமிழ்த்தேசியப்பாடசாலைகள் மட்டுமே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக மத்திய மாகாண தேசியப்பாடசாலைகளைப் பொறுத்தவரையில் கடந்த ஒன்றரை தசாப்த காலங்களுக்கு மேலாகவே ஆசிரியர்- அதிபருக்கான இட மாற்றங்கள் வழங்கப்படாமலே இருப்பதனைக் காணக்கூடியதாக உள்ளது. ஒரு கல்விச் சமூகத்தை பொறுத்த வரையில் காலத்துக்கு ஏற்ற வகையில் கல்வியில், சிந்தனையில் செயற்பாடுகளில் நிர்வாக முறைகளில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயத் தேவையாகும்.

அவ்வாறு ஏற்படுகின்ற மாற்றங்கள் வெறுமனே வாய் சொற்களாகவோ, எழுத்துவடிவ ஆவணங்களாகவோ மட்டும் இருந்து விடக்கூடாது. மாறாக செயல் வடிவம் பெறுதல் வேண்டும். இல்லாவிடின் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிப்பதில் எவ்விதப் பயன்களும் இல்லாமல் போய்விடும். தற்போது பாடசாலை மட்டங்களில் பெறப்பட்டு வருகின்ற தகவல்களின்படி பெருந்தோட்டப் பாடசாலைகலில் தேசிய பாடசாலைகள் உட்பட அனேகமாக பாடசாலைகலில் நீண்ட காலமாகவே ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாமல் இருக்கும் விடயம் தெட்டத்தெளிவாகிவிட்டது.

இவ்வாறு மிக நீண்ட காலமாகவே எமது பெருந்தோட்டப் பாடசாலைகளில் இட மாற்றங்கள் நடைபெறாமையும் எமது மலையக கல்வி முன்னேற்றத்திற்கு ஒரு தடையாக இருந்திருக்கின்றது என்பதையும் நாம் உணர்தல் வேண்டும். அதிலும் மத்திய மாகாண தேசியப் பட்சாலைகளைப் பொறுத்த வரையில் இவ்வாறு இடமாற்றம் பெறுவது என்பது நூற்றுக்கு நூறுவீதம் நடைபெறாமலே உள்ளது. தற்போது புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் காணப்படும். ஒரு தேசியப் பாடசாலையில் மிக நீண்ட காலமாகவே இந்நிலைமை தொடர்கின்றது.

அண்மையில் இப்பாடசாலையில் இருந்து ஓய்வு பெற்ற ஒருவர் மிக நீண்ட காலமாகவே தான் நியமனம் பெற்ற நாள் முதல் தொடர்ந்தும் இதே பாடசாலையில் முப்பத்தைந்து வருட காலத்தை முடித்திருக்கின்றார். ஒருவகையில் தமது வியாபார நடவடிக்கைகளை கவனித்து கொள்வதற்கு வசதியாக, இவரது சேவைக்காலம் தொடரப்பட்டிருந்தாலும் அரசாங்க சேவையாளர் என்ற ரீதியில் இவர் இடமாற்றம் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமான ஒரு விடயமாகும். இது போலவே இந்து தேசிய பாடசாலையில் இன்னும் பல ஆசிரியர்கள் (அதிபர் உட்பட) இந்நிலையில் காணப்படுவதை நாம் அறிய முடிகின்றது. அதன் அடிப்படையில் இப்பாடசாலை தகவலின்படி கல்லூரியின் அதிபர் நியமனம் பெற்ற நாள் முதல் 17 வருடங்களுக்கு மேல் இதே பாடசாலையில் இருப்பதுடன் 21 ஆசிரியர்களுக்கு மேல் தொடர்ந்தும் எட்டு வருடங்களைப் பூர்த்தி செய்தவர்களாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் இடமற்றங்களை பெற்று கொள்ளாமல் இருப்பதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிடலாம்.

1. இப்பாடசாலையில் உள்ள ஆசிரியர்கள் அதிபர் உட்பட பலரும் இப்பாடசாலை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். இதன் காரணமாக இவர்கள் பாடசாலையின் அநேக வளங்களைத் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் நன்கு பயன்படுத்துக் கொள்ள வாய்ப்பாக இருக்கின்றது. இதன் காரணமாக இவர்களால் இப்பாடசாலையை விட்டு வேறு பாடசாலைகளுக்கு செல்வதில் எவ்வித இஸ்டமும் இல்லை. இருக்கும் காலம் வரையில் இப்பாடசாலையிலேயே எப்படியாவது தமது காலத்தை கடத்திவிட வேண்டும் என்ற ஒருவகை எண்ணப்பாடுகள் இவர்களிடம் காணப்படுகின்றது.

2. அடுத்து இப்பாடசாலைக்கு நியமனம் பெற்று வரும் அனேக ஆசிரியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே இப்பாடசாலைக்கு நியமனத்தை கேட்டு பெற்று கொண்டு வருகின்றனர். இவ்வாறு வந்தவர்களில் சிரேஸ்ட ஆசிரியைகளில் ஒருவர் கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகவே இப்பாடசாலையில் கடமை புரிகின்றமை குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனேகமாக இப்பாடசாலையில் தமது இருப்பை மட்டுமே கருத்திற் கொண்டு செயற்படுகின்றார்களேயொழிய முன்னைய காலங்களைப் போன்று தெளிவான ஒரு மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டுமென்ற எண்ணப்பாடுடையவர்களாக காணப்படவில்லையென்றே கூற வேண்டும்.

3. இவைகளைத் தவிர இன்னொரு பிரதான காரணம் தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் வேறு தேசியப்பாடசாலைகளுக்கு மட்டும் தான் நியமன இடமாற்றம் பெறமுடியும் என்ற நிலைப்பாடு. இவ்வாறான நிலைப்பாடுகள் காணப்படுவதால் பெருந்தோட்ட தேசியப்பாடசாலை ஆசிரியர்கள் மாகணப்பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெறக்கூடிய வசதிகள் இல்லை. தேசியப்பாடசாலைகளுக்கு மட்டுமே இடமாற்றம் பெற்றுச் செல்ல வேண்டும் என்றாலும் மத்திய மாகாண தேசிய பாடசலையில் உள்ளவர்கள் வேறு மாகணங்களுக்கே இடமாற்றம் பெற்று செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இதன் காரணமாகவும் ஐந்து வருடத்துக்கு ஒருமுறை இடமாற்றங்களைப் பெற்றுக் கொள்ள விரும்பும் ஆசிரியர்களுக்கும் இடமாற்றம் பெற்றுக்கொள்ள முடியாத சிக்கல் நிலை காணப்படுகின்றது. அதனால் விரும்பியோ விரும்பாமலோ நியமனம் பெற்ற பாடசாலையிலேயே தங்கிவிட வேண்டி ஏற்படுகின்றது.

இவ்வாறு பல்வேறு காரணங்களைக்காட்டி ஆசிரியர் அதிபர்களுக்கான இடமாற்றங்கள் நிராகரிக்கப்படும் போது கல்விச்சமூகத்தில் பல்வேறுபட்ட முறைகேடுகள் இடம்பெறுவதைத் தவிர்க்க முடியாது. இது தேசிய பாடசாலைகள் உட்பட அனைத்து பாடசாலைகளுக்கும் பொருந்தும். அதாவது ஆசிரியர்களுக்கான இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படாதவிடத்து, ஆசிரியர்களின் கற்றல்- கற்பித்தல் விடயங்களில் சலிப்புத்தன்மை தோன்றிவிடுவதுடன் ஆசிரியரின் சுயசிந்தனை மழுங்கடிக்கப்பட்டு விடலாம். அதே நேரத்தில் ஆசிரியர்களின் நடத்தைக் கோலங்களிலும் சமூக சிந்தனை மாற்றங்களிலும் முன்னேற்றம் இல்லாதவர்களாக காண்ப்படுவதுடன் ஒரேவிதமான கற்பித்தல் விடயங்களையும் மேற்கொள்பவர்களாக காணப்படுவர்.

இதன் காரணமாக மாணவர்களின் கற்றல் விடயங்கள் பாதிக்கப்படுவதுடன் அவர்களுக்கும் கல்வியில் அலுப்பு நிலை தோன்றி விடலாம். எனவே ஒரு நல்ல ஆசிரியர் என்பவர் ஒரே பாடசாலையில் தனது காலத்தினை கடத்தல் வேண்டும் என்ற எண்ணப்பாட்டை விட்டு வேறு வேறு பாடசாலைகளுக்கும் இடமாற்றத்தை பெற்றுச் சென்று தமது பணியை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு மேற்கொள்ளும் போது தமக்கான் பல்வேறு அனுபவங்களையும் ஆளுமை ரீதியான முன்னேற்றங்களையும் பெற்றுக்கொள்ள முடியும்.

பாடசாலை அதிபர்களை பொறுத்தவரையில் இவர்களுடைய இடமாற்றங்கள் என்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததொன்று. ஒரு அதிபர் என்பவர் ஒரு பாடசாலையில் ஆசிரியர்கள் உட்பட பாடசாலை சமூகத்தைச் சார்ந்த அனைவரினதும் தலையெழுத்தையே மாற்றி விடக்கூடிய சக்தி படைத்தவர். அவ்வாறான சக்தி படைத்த ஒரு அதிபர் ஒரே இடத்தில் ஒரே பாடசாலையில் தொடர்ந்தும் ஐந்து வருடம் அல்லது எட்டு வருடங்களுக்கு மேல் இருப்பதற்கு விருப்பம் கொள்வார் எனில், அவர் அதிபர் என்ற தமது தகுதியை இழந்து விட்டார் என்றே கூறல் வேண்டும்.

இவ்வாறு இன்று அதிபர் என்ற தமது தகுதியை இழந்துவிட்ட நிலையில் இன்று பெருந்தோட்ட தேசிய பாடசாலைகள் உட்பட அனேக பாடசாலைகளில் அனேக அதிபர்கள் பாடசாலை விடுதிகளை தமக்கு சொந்த வீடுகளாக மாற்றிக்கொண்டு பாடசாலையில் உள்ள வளங்களையும் தமது சொந்தத் தேவைகளுக்கு பயன் படுத்திக்கொண்டிருப்பதுடன் ஒரு பாரிய கல்வி சமூகத்தையே சீரழித்துக் கொண்டிருப்பதை நாம் கண்கணூடாகக் காணக்கூடியதாக உள்ளது.

எனவே எமது மலைநாட்டில் காணப்படும் கல்வி நிறுவனங்கள் "புதிய சிந்தனை" ஊடாக கல்விப் பாதையில் முன்னேற்றம் காணப்பட வேண்டும் எனில், கல்வி அமைச்சு, கல்வி நிர்வாக அமைச்சு, மத்திய மாகாண கல்வி அமைச்சர் மற்றும் அதிபர்-ஆசிரியர் இடமாற்ற விடயங்களோடு தொடர்புடையவர்கள் அனைவரும் மத்திய மாகாண பாடசாலைகள் தொடர்பில் கூடிய கவனம் எடுத்தல் வேண்டும். இவற்றுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மிகவும் அவசரமாகவும் அவசியமாகவும் மேற்கொள்ளல் வேண்டும்.

அதாவது பாடசாலை மட்டத்தில் தற்போது பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாக கொண்டு எட்டு வருடத்துக்கு மேல் தொடர்ந்து ஒரே பாடசாலையில் இருக்கும் அதிபர் ஆசிரியர்களை எவ்வித தயவும் காட்டாமல் இடமாற்றம் செய்தல் வேண்டும். இதில் தேசிய பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டக் கூடாது. ஏனெனில், தற்போது பெருந்தோட்டத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகளில் ஐந்து வருடத்துக்கு மேல் வேலை செய்கின்ற அனைத்து அதிபர், ஆசிரியர்களும் கடந்த காலங்களில் மத்திய மாகாண கல்வி அமைச்சின் கீழ் நியமனம் பெற்றவர்களாக உள்ளனர். இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக்கடிதங்களும் பெருந்தோட்ட ஆசிரியர் நியமனம் என்ற அடிப்படையிலேயே வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நியமனம் பெற்றவர்களில் அனேக ஆசிரியர்கள் இன்னும் கூட தமது ஆசிரியர் பயிற்சியை மேற்கொள்ளாத நிலையில் தமது காலத்தை கடத்திக் கொண்டு இருக்கின்றனர். அதே நேரம் மத்திய மாகாணத்தின் மாகாண அமைச்சின் கீழ் இயங்கிய பாடசாலைகளே தற்போது பெயர்மாற்றங்களுடன் தேசிய பாடசாலையாக தம்மை அடையாளப்படுத்திக்கொண்டு இருக்கின்றன. (உதாரணமாக புஸ்ஸல்லாவை சி.சி. தமிழ் வித்தியாலம் தற்போது இந்து தேசிய கல்லூரியாக பெயர் மாற்றப்பட்டடுள்ளது).

எனவே பெருந்தோட்ட ஆசிரியர் இடமாற்றத்தில் தேசியப் பாடசாலை, மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளைக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக தேசியப்பாடசாலைகளுக்கும் நவோதய பாடசாலைகளுக்கும் இடையிலாவது ஒரு இணைப்பை ஏற்படுத்தல் வேண்டும். இதன் மூலம் நவோதய பாடசாலை அதிபர், ஆசிரியர்களை தேசிய பாடசாலைகளுக்கும், தேசியா பாடசாலை அதிபர், ஆசிரியர்களை நவோதயப் பாடசலைகளுக்கும் இடமாற்றங்களை செய்தல் முடியும். இதனை கட்டாயம் நடைமுறைக்கு கொண்டுவரல் வேண்டும். அவ்வாறு கொண்டுவரும் போது குறிப்பிட்ட தேசியப் பாடசாலைகளில் தொடரும் நிர்வாக முறையீடுகளையும் அதிபர், ஆசிரியர்களிடம் காணப்படும் அலட்சியப் போக்குகளையும் இல்லாமல் செய்வதுடன் மாணவர்களின் கல்வி ரீதியான முன்னேற்ற நடவடிக்கைகளிலும் அர்த்த பூர்வமான முன்னேற்றங்களை ஏற்படுத்த முடியும்.

அதுமட்டுமன்றி மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலைகள் தொடர்பில் மாகாணக் கல்வி அமைச்சின் கண்காணிப்புகள் மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும். தேசியப் பாடசாலைகள் என்பதால் அதனை தமது மேற்பார்வையில் இருந்து கை நழுவ விட்டு விடக்கூடாது. ஏனெனில் குறித்த தேசியப் பாடசாலைகள் பெருந்தோட்ட பிள்ளைகைளின் முன்னேற்றத்தை கருத்திற் கொண்டதாகவே அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அண்மைக் காலமாக இந்த தேசிய பாடசாலையின் நடவடிக்கைகள் தோட்டப்புற மாண்வர்களை புறக்கணிப்பதாகவே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. அதாவது தரம் ஒன்று தொடக்கம் உயர்தரம் வரையில் மாணவர்களுக்கான அனுமதிகள் பெறப்பட வேண்டும் என்றால் குறிப்பிட்ட பிள்ளையின் பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் ஏதாவது உத்தியோகம் செய்பவர்களாக அல்லது நகரவர்த்தகர்களாக இருக்க வேண்டும். அல்லது பெற்றோர்கள் பாடசாலையின் பழைய மாணவர்களாக இருத்தல் வேண்டும் என்று கூறப்படுகின்றது. இந்நிலை தொடரப்படும் எனில் இன்னும் இரண்டு மூன்று வருடங்களின் பின் எமது தோட்டப்புற மாணவர்கள் தேசியப் பாடசாலைகளை எட்டிக் கூட பார்க்க முடியாத நிலை தோன்றிவிடும். அதற்கப்புறம் எதற்குத்தான் பெருந்தோட்டத்தில் இப்படி ஒரு தேசியப் பாடசாலைகள். எனவே கல்வி அமைச்சு இது தொடர்பிலும் கூடிய கவணம் செலுத்த வேண்டும்.

அத்துடன் பெருதோட்டத்தைப் பொறுத்தவரையில் இப்போதுதான் சிறிது சிறிதாக கல்வியில் முன்னேற்றம் கண்டு வருகின்றது. இந்நிலையில் கல்வி அமைச்சின் மூலம் வழங்கப்படுகின்ற வளப்பகிர்வுகளும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும் நிதி உதவிகளும் எவ்வித ஏற்றத்தாழ்வுகளும் காட்டாமல் வழங்கப்பட வேண்டும்.

தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படுவது போலவே மாகாணப் பாடசாலைகளுக்கும் அனைத்து வளப்பகிர்வுகளிலும் சமத்துவம் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட தேசிய பாடசாலைகளுக்கு கிடைக்கின்ற உதவிகளும் பணவசதிகளும் புத்தக விநியோகங்களும் மாகாணப்பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. அதே நேரம் மாகாணப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுகின்ற சலுகைகள் உதவிகளும் தேசியப் பாடசாலைகளுக்கு வழங்கப்படுவதில்லை. எனவே இந்நிலையில் மாற்றம் ஏற்படுவதுடன் மாகாண ரீதியில் பாடசாலைகள் சமத்துவத்துடன் வழி நடத்தப்படுதல் வேண்டும்.

இதே நேரத்தில் மத்திய மாகாணத்தில் உள்ள கல்வி ஆலோசகர்கள் தொடர்பிலும் சில விடயங்களை குறிப்பிடல் வேண்டும். அதாவது பாடசாலை மட்டங்களில் மேற்பார்வைகளை மேற்கொள்ளும்போது, ஆசிரியர்களுக்கான கருத்தரங்குகளை மேற்கொள்ளும்போதும், தேசியப் பாடசாலை மாகாணப் பாடசாலை என்ற வேறுபாடுகளை காட்டும் வகையில் அர்த்தமற்ற தரக் குறைவான விமர்சனங்களை தவிர்த்துக்கொள்வதுடன் பாடசாலைகளுக்கு இடையிலான ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் செயற்படல் வேண்டும். குறிப்பாக சில வலயக் கல்வி ஆலோசகர்களிடம் இவ்வறான குறைபாடுகள் பல கணப்படுகின்றமையை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. "ஆசிரிய ஆலோசகர் என்பவர் ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் விடயங்களில் ஆலோசனை கூற வேண்டுமே ஒழிய ஆசிரியர்களின் குறைபாடுகளையோ, பாடசாலைகளின் குறைபாடுகளையோ விமர்சனம் செய்வதாக இருக்கக்கூடாது. அப்படி விமர்சனம் செய்வதாக இருந்தால் அவ்விமர்சனம் ஆசிரியரின் உள ரீதியான பாதிப்பை ஏற்படுத்திவிடாமல் அவருடைய முன்னேற்றத்துக்கு வழிகாட்டுவதாகவே அமைதல் வேண்டும் என்பதை கவனத்தில் கொள்வதும் வேண்டும்.

எனவே இது போன்ற விடயங்கள் கருத்திற் கொண்டு எதிர்கால மலையக சமூகத்தில் நிரந்தரமான கல்வி விடியலுக்கு ஏற்ற வகையில் சிறந்த நடவடிக்கைகளை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன் மத்திய மாகாணத்தில் உள்ள தேசிய பாடசாலை ஆசிரியர், அதிபர்களுக்கான இடமாற்றங்களையும் எமது மாகாண கல்வி அமைச்சின் ஊடாகவே ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் சட்ட ரீதியான நடைமுறைகளை கொண்டு வருதல் வேண்டும்.

அதேநேரம் ஆசிரியர் இடமாற்றங்களை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு தகுதி அடிப்படையில் அவர்களுடைய விண்ணப்பங்கள் விரைவாக பரிசீலிக்கப்படுவதுடன் வெற்றிடங்கள் நிலவும் பாடசாலைகளுக்கே அவர்கள் இடமாற்றம் செய்யப்படல் வேண்டும். இவ்வாறான நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆங்காங்கே பாடசாலைகளுக்குள் இடம் பெற்றுக்கொண்டிருக்கும் மறைமுகமான குளறுபடிகளை களையச் செய்வதுடன் யதார்த்தபூர்வமான தெளிவான ஒரு மலையக கல்விச் சமூகத்தைக் கட்டி எழுப்ப முடியும் என்பது சத்தியமே.

நன்றி: வீரகேசரி
sep 30- 2007

Tuesday, October 2, 2007

சிறுவர்களின் உரிமைகளைப் பேணுவோம்

-த.மனோகரன்-

சிறுவர்களது உரிமைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துமுகமாக ஒவ்வொராண்டும் அக்டோபர் மாதம் 01 ஆம் திகதி உலக சிறுவர் தினமாக உலகளாவிய அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உலகளாவிய ரீதியில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் அறிக்கைகள், கருத்தரங்குகள், மாநாடுகள், விழாக்கள் என்பன நடத்தப்படுவதுடன் பல்வேறு தரப்பினராலும் சிறுவர் உரிமையைப் பேணுவதாக சபதங்கள் எடுக்கப்படுவது வழமையான நிகழ்வாயுள்ளன.

1924 ஆம் ஆண்டிலேயே முதன் முதலில் சிறுவர் உரிமை பற்றிய கொள்கை வெளியிடப்பட்டது. அதன் பின்னர் 1959 ஆம் ஆண்டு பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக ஐக்கிய நாடுகள் சபையால் விரிவாகவும் தெளிவாகவும் சிறுவருக்குரிய உரிமைகள் தொடர்பான கொள்கைப் பிரகடனம் வெளியிடப்பட்டது. 1959 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கொள்கைப் பிரகடனம் 1924 ஆம் ஆண்டின் பிரகடனத்தை விட பல அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்தது. இந்நிலையிலே, 1979 ஆம் ஆண்டு உலக சிறுவர் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபையால் பிரகடனப்படுத்தப்பட்டு பரந்த அளவில் சிறுவர் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இந்நிலையில், சர்வதேச தொழிலாளர் சம்மேளனம் 1989 ஆம் ஆண்டின் சிறுவர் உரிமை தொடர்பான கொள்கைப் பிரகடனத்தை அங்கீகரித்து ஏற்றுக்கொண்டது. 1992 ஆம் ஆண்டு மேற்படி உரிமைகள் தொடர்பான விதிமுறைகளை இலங்கையும் நடைமுறைப்படுத்துவதாக உறுதிசெய்து ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, சர்வதேச சிறுவர்கள் அனுபவிக்கும் சகல அங்கீகரிக்கப்பட்ட உரிமைகளையும் இலங்கையிலுள்ள சகல சிறுவர்களும் அனுபவிக்கும் உரிமை சட்ட ரீதியாக வழங்கப்பட்டுள்ளது. பதின் நான்கு வயது வரையான பிள்ளைகள் சிறுவர்களாகக் கணிக்கப்படுகின்றனர். இனம், மொழி, சமயம், பால் என்ற எந்தவொரு வேறுபாடின்றி குறிக்கப்பட்ட உரிமைகளை அனுபவிக்கும் உரிமை 14 வயது வரையான ஒவ்வொரு சிறுவர், சிறுமியருக்கும் உள்ளன. நடைமுறையில், இவ் விதிமுறைகள் பேணப்படுகின்றனவா என்று மதிப்பீடு செய்யும்போது கவலைதரும் விடயங்கள் பல வெளிச்சத்திற்கு வந்து வேதனைப் படுத்துவதுடன் சர்வதேசம் ஏற்றுக்கொண்ட சட்ட விதிகளும் ஏட்டளவில் மட்டுமே பேணப்படும் அவலம் புரிகின்றது.

சர்வதேச ரீதியில் சிறுவர்களுக்குரிய உரிமைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளவை பின்வருமாறு அமைகின்றது.

* வாழ்வதற்கும் முன்னேறுவதற்குமான உரிமை
*பிறப்பின்போது பெயரொன்றையும் இன அடையாளத்தையும் பெற்றுக்கொள்ளும் உரிமை
*பெற்றோரைத் தெரிந்து கொள்வதற்கும் அவர்களது பாதுகாப்பைப் பெற்றுக்கொள்வதற்குமான உரிமை
*பெற்றோரிடமிருந்து தம்மைத் தனிமைப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை
*கருத்தை வெளிப்படுத்தும் உரிமை
*சிந்திப்பதற்கும் மனச்சாட்சிப்படி நடப்பதற்கும் சமய மொன்றை பின்பற்றுவதற்குமான உரிமை
*சமூக உரிமை, தனியுரிமை, சுகாதார வசதிகள் பெறும் உரிமை
*போதிய கல்வியைப் பெறும் உரிமை
*பொருளாதார சுரண்டல்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
*பாலியல் வல்லுறவுகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் உரிமை
*சித்திரவதை குரூரமாக நடத்துதல் போன்ற தண்டனைகளிலிருந்து தவிர்த்துக்கொள்ளும் உரிமை
* சாதாராண வழக்கு விசாரணைக்குள்ள உரிமை
*சுதந்திரத்திற்கும் பாதுகாப்பிற்குமான உரிமை

இவ்வாறு பல்வேறு உரிமைகள் சிறுவர் உரிமை தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளன. நடைமுறையில் உலக நாடுகளிலா கட்டும் அல்லது நமது நாட்டிலாகட்டும் இவற்றில் எத்தனை நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இலங்கையின் கல்விக் கொள்கையாக சிறுவர்கள் என்ற பதின்நான்கு வயதுக்குட்பட்ட சகலருக்கும் கட்டாயக் கல்வி வழங்கப்படவேண்டுமென்று உள்ளது. அதேபோன்று அவ் வயதுக்குட்பட்ட பிள்ளைகளை வேலைக்கமர்த்துவதும் குற்றமென்று சட்டவிதி கூறுகின்றது. அறிக்கைகள், விழாக்கள், கொண்டாட்டங்கள் நடத்தப்படும் சிறுவர் உரிமை தினத்திலே இலங்கையில் சகல சிறுவர்களும் தமக்குரிய அடிப்படை உரிமைகளை, இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளப்பட்ட உரிமைகளை அனுபவிக்கின்றனரா அதற்கான வழிவகை செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சிந்திக்கவேண்டும்.

தனிநபர் காட்டு மிராண்டித் தனங்களும் நிறுவன ரீதியான பயங்கரவாத செயற்பாடுகளும் இலங்கைச் சிறுவர்களின் உரிமைகளுக்குப் பாதகம் செய்கின்றன. இன, மத, மொழி ரீதியான பாகுபாடுகளும் மனிதப் பண்பை இழந்த சிந்தனை ஒழுக்கம் இழந்தவர்களாலும் பெரும் பாதிப்பை நம் நாட்டுச் சிறுவர்கள் அடைகின்றனர். உயிர்குடிக்கும் குண்டுகள், வெடி களுக்கு மத்தியில் அச்சத்துடன் வாழும் சிறுவர்களையும் நிம்மதியாக சொந்த வீடுகளில் பெற்றோர்களுடன் வாழ முடியாது அகதிகளாக அநாதைகளாக அல்லற்படும் சிறுவர்களையும் பசிக்கு உணவின்றி பரிதவிக்கும் சிறுவர்களையும் கல்வி பெறமுடியாத நிலையில் கைவிடப்பட்ட சிறுவர்களையும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாகும் சிறுவர்களையும், சுதந்திரமாக நடமாடக்கூட முடியாது கட்டுப்படுத்தப்பட்டுள்ள சிறுவர்களையும் இது போன்ற பல்வேறு உரிமை மீறல்களுக்கு உட்பட்டு வேதனையுடன் வாழும் சிறுவர்களையும் கொண்ட நம் நாட்டிலும் சிறுவர் உரிமை தினம் சிறப்பாகக் கொண்டாடுவது வேடிக்கையானது என்பதை எவரும் எண்ணிப்பார்ப்பதில்லை.

இந்த நாட்டில் சிறுவர்கள் அதாவது எதிர்கால சந்ததியினர், பகை, வெறுப்பு, குரோதம், போன்ற தீய உணர்வுகளைப் புகட்டி இன, மத, மொழி முரண்பாடுகளை ஊட்டி வளர்க்கப்படும் அவலம், கொடுமை நிலவுகின்றது. இவ்வாறான நிலையில் வளர்ந்து வரும் நாளைய சந்ததியின் செயற்பாடுகள் எவ்வகையிலும் மேம்பட்டதாயிருக்க முடியாது.

உண்மையைக் கூறுவதனால் நாட்டைக் குட்டிச் சுவராக்கி,நாசமாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள இன்றைய வளர்ந்த, வயோதிப சமூகம் வளர்ந்து வரும் இளந்தலைமுறைக்கு வழிகாட்டியாக விளங்குவதாயில்லை. நாளைய சமுதாயத்தின், நாட்டின் மீது பற்றுக்கொண்டவர்கள் நடைமுறையில் நிலவிவரும் தீய செயற்பாடுகளைத் தகர்த்து புதியதோர் சிந்தனையுடன் புதிய வழி,நல்ல வழிகாட்டுவதே சிறுவர்களின் உரிமைகளைப் பேணும் வழியாகும்.

நன்றி: தினக்குரல்
(oct 01-2007)

Monday, October 1, 2007

சிறுவர்களுக்கான புதிய உலகத்தை உருவாக்குவோம்

ச.ஜெயப்பிரியா
கிழக்கு பல்கலைக்கழகம்

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் சிறுவர் தொடர்பான பிரச்சினைகள் பாரிய சவால்களில் ஒன்றாகக் காணப்படுகின்றது. விஞ்ஞானம், தொழில் நுட்பம் போன்றவற்றின் துரித அபிவிருத்தி ஆச்சரியப்படத்தக்க வகையில் காணப்படுகின்ற அதேவேளை இத்தகைய பாரிய கண்டுபிடுப்புக்களின் அதிகளவான பாவனை அபாயங்களைத் தோற்றுவிக்கின்ற ஒன்றாகவே காணப்படுகின்றது. அதுபோலவே இரசாயன போதைப் பொருட்களின் துஸ்பிரயோகம் போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் பழக்கத்திற்கு இட்டுச் செல்கின்றது. பல்வேறுபட்ட நாடுகளில் இடம்பெறுகின்ற இரணுவ முரண்பாடுகள், உள்நாட்டு யுத்தங்கள் மற்றும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் என்பன நேரடியாகவும் மறைமுகமாகவும் சிறுவர்களையே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றன.

இன்றைய காலகட்டத்தில் மில்லியன் கணக்கான சிறுவர்கள் போரின் விளைவுகளால் உடல் உள உணர்வு ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்களைக் பொறுத்தவரையில் அதிகளவில் மதுபானம், சிகரெட் மற்றும் போதைபொருள் பாவனை என்பவற்றிற்கு அடிமையாவதுடன் அதிகமானோர் HIV / AIDS போன்ற நோய்களாலும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுடன் வறுமை என்பது சிறுவர்களைப் பாதிக்கும் ஒரு பாரிய பிரச்சினையாகும்.

எமது நாட்டின் அரசியல் நிகழ்சித்திட்டங்களில் சிறுவர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கான பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறுவர்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுக்கொடுப்பதில் இவை பெரும் பங்கு வகிக்கின்றன. பலதசாப்தங்களாக இலங்கையில் சுகாதாரம் மற்றும் கல்விச் செயற்பாடுகாள் என்பவற்றை அபிவிருத்தி செய்வதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக குழந்தை மற்றும் தாய்சேய் இறப்பு வீதம் என்பன குறைவாக காணப்படுவதுடன், உயர்வான கல்வியறிவிற்கும் பாடைசாலைகளில் சிறுவர்களின் அதிகளவான பங்களிப்பிற்கும் இட்டுச் செல்கின்றது.

கல்விச் சேவைக்காக இலவச பாடசாலை மற்றும் பல்கலைக்கழக வசதிகள் என்பன காணபடுகின்றன. வறிய மானவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகாமல் இருப்பதற்காக இலவசப்பாடநூல்கள், புலமைப்பரிசில்கள் என்பன வழங்கப்படுகின்றன. இன்று எமது நாட்டில் 90 வீதத்துக்கு மேற்பட்ட கல்வியறிவு வீதம் ஆண்கள் மற்றும் பெண்களிடையே காணப்படுகின்றது. இது எமது நாட்டில் பால் வேறுபாடின்றி அனைவரும் கல்விக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு ஒரு சான்றாகும். சிறுவர்கள் அனைவருக்கும் கல்வியை வழங்குவதற்காகவும் சிறுவர் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காகவும் 1977 ஆம் ஆண்டு கட்டாயக் கல்விச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனடிப்படையில் அரசாங்கம் விரிவுபடுத்தப்பட்ட கல்விச் சீர்த்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்தியது. இது ஆரம்ப குழந்தைப் பருவ அபிவிருத்தி, மாணவர் மையக்கற்பித்தல் முறை, விஞ்ஞானம் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் போன்றவற்றின் சவால்களுக்கு சிறப்பாக முகம் கொடுக்க கூடிய வகையில் சிறுவர்களை தயார்படுத்தல் போன்றவற்றினை உள்ளடக்கியுள்ளது.

கல்விச்சேவையைப்போலவே சமமான முன்னுரிமை சுகாதாரத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள் மற்றும் ஆரம்ப பாடசாலை சிறுவர்கள் போன்றோருக்கு முதன்மையான சுகாதாரப்பராமரிப்பு சேவைகள் வழங்கப்படுகின்றன. எனினும் இன்றுவரை போசாக்கு குறைபாடு HIV / AIDS போன்ற நோய்களின் தாக்கம் என்பவற்றிற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இலங்கையை பொறுத்தவரை இந்நோய்கள் குறைவான பரம்பலைக் கொண்ட ஒரு நாடாகக் காணப்படுகின்றது. இருப்பினும் இளைஞர்களிடையே இந்நோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் உலகளாவிய நோக்கில் கவனம் செலுத்தப்படுகின்றது.

இன்றைய நிலையில் சிறுவர்கள், குடும்பங்கள், சமூகங்கள், பாதுகாப்பு வலயங்களாகக் காணப்படுகின்ற பாடசாலைகள், மற்றும் வயோதிபர்கள் போன்றோரால் இரகசியமான முறையில் தகாத நடவடிக்கைகளுக்கும் பலாத்தகாரத்திற்கும் உட்படுத்தபடுகின்றனர். சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் அத்துமீறல் தொடர்பான பிரச்சனைகளைக் கண்காணிப்புச் செய்யும் முகமாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தொழிற்பட்டுவருகின்றது. இச்சபை பாலியல் வன்முறை, போதைப்பொருள் விற்பனை, சிறுவர் துஸ்பிரயோகம் மற்றும் சிறுவர் கொடுமைகளைக் கட்டுப்படுத்தல் அவற்றிற்கு எதிராகப் பிரசாரம் செய்தல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றது.

இலங்கையில் சிறுவர்களை உள்நாட்டு முரண்பாடுகளில் இருந்து பாதுகாப்பது பாரிய சவால்களில் ஒன்றாக காணப்படுகின்றது. சிறுவர்கள் இராணுவப்படைகளில் சேர்த்துகொள்ளப்படுவது போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்ளவேண்டியுள்ளது. அத்துடன் இன்று சிறுவர்கள் பல்வேறுபட்ட இடங்களில் குறைந்த சம்பளங்களில் வேலைக்கமர்த்தப்படுவது ஒரு பாரிய பிரச்சனையாகும். சிறுவர் தொழிலாளர்கள் குறிப்பாக முறைசாரா துறைகளிலும் மற்றும் உள்நாட்டு தொழிலாளர்கள் என்ற ரீதியிலும் காணப்படுகிறனர். இதனால் உள்நாட்டுச் சேவைகளில் சிறுவர்களை வேலைக்கமர்த்துவதற்கான வயதெல்லை அதிகரிக்கப்பட்ட போதிலும் தோட்டப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் பெரும்பாலான சிறுவர்கள் மறைமுகமாக வேலைக்கமர்த்தப்படுகின்றனர்.

இன்று வறுமை என்பது சிறுவர்களை ஆட்டிப்படைக்கின்ற ஒரு சவாலாகும். வறுமையின் காரணமாக பெற்றோர்களினாலேயே சிறுவர்கள் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். இதன் விளைவாக சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் பாரதூரமானவையாகக் காணப்படுகின்றன. இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்களை மேற்கொள்வதற்காகவும் அறிவுரைகளை வழங்குவதற்காகவும் UNICEF போன்ற சர்வதேச முகவர் நிலையங்களுடன் அரசாங்கம் இணைந்து செயற்படுகின்ற போதிலும் கிராமப்புறங்களில் இடம்பெறுகின்ற சிறுவர் கொடுமைகள் பெரும்பாலும் வெளிக்கொண்டுவரப்படாதவையாகவே காணப்படுகின்றன. அரசாங்கம் குறிப்பாக வயோதிபர்கள் மற்றும் இளைஞர்களால் உபயோகிக்கப்படுகின்ற சிகரட், மதுபானம், போதைப்பொருள் போன்றவற்றின் பாவனையை தடை செய்வதற்கு முன்னுரிமை வழங்கியுள்ளது. இளைஞர்களிடையே பாவிக்கப்படுகின்ற இவ்வாறான தீங்குவிளைவிக்கும் பொருட்களின் பாவனையை தடை செய்து அவற்றில் இருந்து இளைஞர்களைப் பாதுகாத்தல் மற்றும் சுகாதாரத்திற்கான வாழ்க்கை முறையினை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படல் வேண்டும். இல்லாவிடின் அதுவே இன்றைய சிறுவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் ஒரு தூண்டுசக்தியாகும்.

அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் சிறுவர் மீதான தாக்கத்தின் புதிய சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நாடுகள் சிறுவர் தொடர்பான பிரச்சனையை தீர்ப்பதற்கு தீவிரமாகச் செயற்படவேண்டும். அப்போது தான் சிறுவர்களின் உரிமைகளையும் அவர்களின் நன்னடத்தைகளையும் பாதுகாக்கமுடியும். சிறுவர் மீதான வன்முறைகளுக்கு முக்கிய காரணமாக அமைவது வறுமையே. வறுமைக்குறைப்பு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்வது சிறுவர்கள் எதிர்நோக்கும் பல்வேறுபட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு அடிகோலாக அமையும்.

சிறுவர் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுடன் சிறுவர்களின் சுதந்திரமான செயற்பாடுகள்,பங்களிப்புக்கள் என்பனவற்றில் அவர்களுக்குள்ள உரிமைகளில் விழிப்புணர்வை தூண்டுவதற்காக பாடசாலையை மையமாகக் கொண்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்படல் வேண்டும்.அத்துடன் பாடசாலைகள்,வீடுகள் என்பவற்றில் சிறுவர்கள் எதிர்நோக்குகின்ற உடல்,உள ரீதியான கொடுமைகளுக்கு எதிராக பெற்றோர்களிடதிலும் விழிப்புணர்வை தூண்ட வேண்டும்.

எனவே, சிறுவர்களின் சுதந்திரமான வளர்ச்சிக்கு தகுந்த சூழலை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு வயோதிபர்களிடமே காணப்படுகின்றது. அத்துடன் சிறுவர்களின் எதிர்கால நலனில் கவனம் செலுத்த வேன்டிய பாரிய பொறுப்பு அரச தலைவர்கள், அரச சார்பற்ற மற்றும் தனியார் துறை தலைவர்களின் கைகளிலேயே தங்கியுள்ளது. சிறுவர்கள் தனித்து விடப்பட்டவர்கள் அல்லர். அவர்கள் அனைத்து உரிமைகளையும் பெற்றவர்கள் என்பது எமது நாட்டில் வாழும் ஒவ்வொருவரின் எண்ணத்திலும் நிலைத்திருக்க வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் மீதான கொடுமைகளில் இருந்து அவர்களை பாதுகாத்து அவர்களுக்குத் தகுந்த மகிழ்ச்சிகரமான புதியதொரு உலகினை உருவாக்க முடியும். சிறுவர்கள்தான் நாட்டின் எதிர் காலம் எனவே ஒவ்வொருவரும் சிறுவர் உரிமைகள் தொடர்பான விடயங்களில் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும்.

நன்றி: வீரகேசரி
(sep 30- 2007)